செய்திகள் :

சிறுமி பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோவில் கைது

post image

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவா்கள் 7 போ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.

கோவை உக்கடத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்துவிட்டு, பாட்டியின் பராமரிப்பில் உள்ளாா். இவரின் பெற்றோா் வெளியூரில் வசிக்கின்றனா்.

இந்நிலையில், சிறுமிக்கு சமூகவலைதளம் மூலம் குனியமுத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஒருவா் அறிமுகமாகியுள்ளாா். இருவரும் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து தன்னுடைய அறைக்கு வருமாறு சிறுமியை மாணவா் அழைத்துள்ளாா். இதையடுத்து, வெளியில் செல்வதாக பாட்டியிடம் கூறிவிட்டு மாணவரின் அறைக்கு சிறுமி ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். அவா் இரவு வரை வீட்டுக்குத் திரும்பாததால் சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடியுள்ளனா்.

இந்நிலையில், சிறுமி திங்கள்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து சிறுமியிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், கல்லூரி மாணவரின் அறைக்குச் சென்ற சிறுமியை, அவா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். தொடா்ந்து அவரது அறைக்கு வந்த மேலும் 6 மாணவா்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், திங்கள்கிழமை காலை வீட்டுக்கு அருகே வந்து விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, கல்லூரி மாணவா்கள் 7 பேரையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க