செய்திகள் :

சிறுமி வன்கொடுமை வழக்கு: ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் மீண்டும் நீட்டிப்பு!

post image

சிறுமி வன்கொடுமை வழக்கில் மதபோதகர் ஆசாராம் பாபுவின் இடைக்கால ஜாமீனை மீண்டும் நீட்டித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர் தனது ஆசிரமத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சூரத்தை சேர்ந்த அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காந்திநகர் செஷன்ஸ் நீதிமன்றம் ஆசாராம் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை வழங்கியது.

வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஆசாராம் பாபுவின் தற்காலிக ஜாமீனை ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டித்து குஜராத் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக, ஆசாராம் பாபுவுக்கு கடந்த 2018-ல் முதல்முறையாக 7 நாள்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, அது 5 நாள்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதேபோல, கடந்த டிசம்பா் 10, 2024-ல் 17 நாள்கள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து, ஆசாராம் பாபுவின் உடல்நிலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் 31 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிபதிகள் இலேஷ் ஜே வோரா மற்றும் நீதிபதி பி.எம். ராவல் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்டனர்.

ஜூலை 3 ஆம் தேதி இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் ஆசாராமின் உடல்நிலை மேலும் மோசமடைந்தால், அவர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்ற விலக்கு அளித்திருந்தது.

இந்த நிலையில், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி, தற்காலிக ஜாமீனை நீட்டிக்கக் கோரி, ஆசாராம் பாபு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதன்படி, அவரது இடைக்கால ஜாமீன் மீண்டும் வருகிற ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Gujarat HC Extends Asaram Bapu's Temporary Bail Till August 21 In Rape Case

இதையும் படிக்க : குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும்.. நீங்களே வெற்றியாளர்! அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் காட்டம்

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தலைமை அர்ச்சகர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். ஆண்டுதோறும் சவான் மாத பௌர்ணமி நாளில், வாரணாசியில் உள்ள ஆத்ம விஸ்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் சிறப்பாக அலங்கரிக... மேலும் பார்க்க

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல: தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்

பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை வெளியிட என்பது கட்டாயமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத... மேலும் பார்க்க

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை இன்று(ஆக. 10) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவைகள் ஊதா மற்றும் பச்சை தடங்களில் வழங்கப்படுகின்றன. ... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குல்காம் மாவட்டத்தின் அகல... மேலும் பார்க்க

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

அமெரிக்காவுடன் வா்த்தகப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், ‘இந்தியா, தனது தேசிய-உத்திசாா் நலன்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது; எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது’ என்று முன்னாள் குடியரசு துணைத் ... மேலும் பார்க்க

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்பால் உலக அளவில் நிலவும் வா்த்தக நிச்சயமற்ற சூழலில் இருந்து உள்நாட்டுத் தொழில் துறையினரைப் பாதுகாக்க ரூ.2,250 கோடி மதிப்பீட்டில... மேலும் பார்க்க