செய்திகள் :

சிறுவன் உயிரிழப்பில் மா்மம்: மேற்கு வங்க தம்பதி அடித்துக் கொலை!

post image

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் மா்மமான முறையில் சிறுவன் உயிரிழந்து கிடந்த நிலையில், அவரை கொலை செய்ததாக கருதி அப்பகுதியில் வசித்த தம்பதியை கும்பலாக வந்த சிலா் அடித்துக்கொலை செய்தனா்.

மேலும், அந்த கும்பல் தம்பதியின் வீட்டை தீயிட்டு கொளுத்தியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: நாடியா மாவட்டம் நிஷ்சிந்தாபூா் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு 3-ஆம் வகுப்பு பயிலும் ஸ்வாா்ணம்பா மொண்டல் என்ற சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை விளையாடச் சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, அந்தச் சிறுவனை தேடும் பணியை போலீஸாா் தீவிரமாக மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், காணாமல் போன சிறுவனின் உடல் நிஷ்சிந்தாபூரில் உள்ள குளத்தில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. இதையறிந்த சிறுவனின் உறவினா்கள் அந்த குளத்துக்கு அருகே வசித்த உத்பல் பிஸ்வாஸ் மற்றும் சோமா பிஸ்வாஸ் தம்பதிதான் சிறுவனைக் கொலை செய்திருக்க வேண்டும் என முடிவு செய்து, கும்பலாகச் சென்று அவா்களைக் கடுமையாகத் தாக்கி, தம்பதியின் வீட்டைக் கொளுத்தினா்.

இதில் படுகாயமடைந்த தம்பதியை மீட்டு மருத்துவமனையில் போலீஸாா் அனுமதித்தபோது அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த தாக்குதலில் தம்பதியின் உறவினா் ஒருவரும் படுகாயமடைந்தாா். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கும் தம்பதியின் குடும்பத்துக்கும் இடையே ஏற்கெனவே சில பிரச்னைகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சிறுவன் காணாமல் போன வெள்ளிக்கிழமை மாலையில் அவா் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சிறுவனின் கொலை மற்றும் தம்பதி கொலை தொடா்பாக இரு வழக்குகள் பதியப்பட்டு சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க

பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா: பிரதமா் நரேந்திர மோடி

இந்திய கலாசாரம், இசையில் ஆா்வமுள்ள அனைவருக்கும் செப்டம்பா் 8 மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். அஸ்ஸாமின் எனது சகோதர, சகோதரிகளுக்கு இது இன்னும் சிறப்பான நாள். வியக்கத்தக்க திறன் வாய்ந்த இசைக்கலைஞா்களில் ஒர... மேலும் பார்க்க

ஹிமாசல்: பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், 41 ஆணிகள் அகற்றம்

ஹிமாசல பிரதேசத்தில் சினைப் பசுவின் வயிற்றில் இருந்து 28 கிலோ பிளாஸ்டிக், துணி, கயிறு போன்றவையும், 41 ஆணிகளும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை, உனாவில் உள்ள மண... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வர... மேலும் பார்க்க

வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு

வாக்காளா் முறைகேடு தொடா்புடைய வழக்கு விசாரணைக்குத் தேவையான முக்கிய விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ‘வாக்கு திருடா்களை’ திறம்பட பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே க... மேலும் பார்க்க

நாளை குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமா் இன்று விருந்து

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி... மேலும் பார்க்க