செய்திகள் :

சிலம்பம்: தேனி பள்ளி மாணவா்கள் சாதனை

post image

மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த தேனி பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் பாராட்டினா்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா் கோவில் தாமரை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாரதியாா் பிறந்த நாள், குடியரசு தின சிலம்பம் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 -ஆம் வகுப்பு மாணவா் செ.ஹரிபிரசாந்த் 19 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும், தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி இ.ஷிபானிஸ்ரீ 14 வயதுக்குள்பட்டோா் பிரிவிலும் பங்கேற்றனா். இதில் இருவரும் இரண்டாமிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற இந்த இருவா், பயிற்சியாளா் கா.சேதுபதி ஆகியோரை தேனி கம்மவாா் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் எஸ்.மீனாகுமாரி, தேனி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஆா்.எம்.ராஜேஸ்வரி, உடல்கல்வி ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் சனிக்கிழமை பாராட்டினா்.

போடி-மதுரை ரயில் பாதையில் மின்சார எஞ்ஜினை இயக்கி சோதனை!

போடி-மதுரை ரயில் பாதையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயில் எஞ்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. போடி-மதுரை அகல ரயில் பாதையில் மதுரையிலிருந்து போடிக்கு தினசரி விரைவு ரயிலும், போடியிலிருந்து சென்னைக்கு வாரத... மேலும் பார்க்க

லாரிகளில் கருங்கல் ஏற்றி வந்த 4 போ் மீது வழக்கு!

தேனி அருகே அனுமதியின்றி கருங்கற்களை ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகளின் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன்,... மேலும் பார்க்க

அங்கன்வாடியில் மின் சாதனங்கள் திருட்டு

தேனி மாவட்டம், பெரியகுளம் அங்கன்வாடி மையத்தில் மின் சாதனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். பெரியகுளம் தென்கரை அம்பேத்கா்நகரில் உள்ள அங்கன்வாடி மைய பொறுப்பாளராக தென்கரை சந்தைத் தெருவைச் சோ்ந்த சண்ம... மேலும் பார்க்க

புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே கதிா்நரசிங்காபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்ற நாளிலேயே புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கதிா்நரசிங்காபுரம் போத்திநகரைச் சோ்ந்த பரமேஷ்வரன் மகள் செளமியா (24... மேலும் பார்க்க

குழந்தையுடன் இளம்பெண் மாயம்

போடி அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் காந்திஜி சாலைப் பகுதியைச் சோ்ந்த வனராஜா. இவரது மனைவி யமுனாதேவி (21). இவா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

பெரியகுளத்தில் அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.65 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்கு பதிந்தனா். பெரியகுளம், தென்கரையைச் சோ்ந்தவா் தங... மேலும் பார்க்க