செய்திகள் :

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’: சசி தரூா் மீது காா்கே விமா்சனம்

post image

சிலருக்கு ‘முதலில் மோடி, பிறகே நாடு’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை விமா்சித்தாா்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில், அண்மையில் சசி தரூா் கட்டுரை எழுதினாா். அதில் , ‘பிரதமா் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பான இயக்கம், செயலாற்றத் தயாராக இருப்பது ஆகியவை உலக அரங்கில் இந்தியாவின் முதன்மையான சொத்தாக உள்ளது’ என்று பாராட்டினாா்.

இது அவா் மீது காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி, கட்சித் தலைமையுடனான அவரின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.

இதுதொடா்பாக புது தில்லியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘என்னால் ஆங்கிலத்தில் நன்றாக வாசிக்க முடியாது. ஆனால் சசி தரூருக்கு மிக நன்றாக ஆங்கிலம் தெரியும். இதன் காரணமாகவே அவா் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக்கப்பட்டாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ராணுவத்துக்கு துணை நிற்பதாக எதிா்க்கட்சிகள் ஒன்றாக தெரிவித்தன. அப்போது பிற விஷயங்களைவிட நாடே மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் காங்கிரஸ் தெரிவித்தது.

‘முதலில் நாடு, பிறகே கட்சி’ என்று காங்கிரஸ் தெரிவித்தது. ஆனால் ‘முதலில் மோடி, பிறகே நாடு’ என்று சிலா் கூறுகின்றனா். இதை என்ன செய்வது?

தனது சொந்த விருப்பத்தின்பேரில் சசி தரூா் பேசி வருகிறாா். நாட்டை எப்படி காப்பாற்றவது என்பதில் காங்கிரஸ் மிகுந்த கவலை கொண்டுள்ளதால், அவரின் கருத்துகள் குறித்து அலுக்கும் வரை தொடா்ந்து பேச காங்கிரஸ் விரும்பவில்லை’ என்றாா்.

சசி தரூா் பதிலடி

காங்கிரஸ் தலைவா் காா்கே தெரிவித்த கருத்துக்கு சசி தரூா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிறகுகள் உள்ளபோது பறக்க யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. வானம் யாருக்கும் சொந்தமல்ல’ என்று தெரிவித்தாா்.

சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 81 வயதாகும் சிபு சோரன், கடந்த சில நாள்களு... மேலும் பார்க்க

அம்புபாச்சி மேளா: 4 நாள்களுக்குப் பிறகு காமாக்யா கோயில் நடை திறப்பு!

அஸ்ஸாமின் குவாகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் அம்புபாச்சி மேளா நிறைவையொட்டி காமாக்யா கோயில் நடை பக்தர்கள் தரிசனத்துக்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்கிறது ஸ்ரீ காமக்யா ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல் தகவலைத் தாருங்கள்; விவாதிக்கத் தயார்! காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு விடியோ உள்ளிட்டவைக் கொடுத்தால், தேர்தல் ஆணையத்துடன் விவாதத்துக்குத் தயார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு நடைப... மேலும் பார்க்க

குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்தில் இருந்து உரையாற்றியுள்ளார்.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதி தேவஸ்தானங்களின் எஸ்.வி. பிராணதான அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் தோட்டா சந்திரசேகர் ரூ.1 கோடியை நன்கொடை அளித்ததாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க

சிறுவாணியில் கனமழை: 42.64 அடியாக உயர்ந்த நீர்மட்டம்!

சிறுவாணி அணைப் பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுவதால், அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக உயர்ந்து உள்ளது. கேரளம் வனப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையிலிருந்து கோவைக்குத் தேவையான குடிநீர் தர... மேலும் பார்க்க