செய்திகள் :

சிவகங்கை நீதிமன்றத்தில் புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

சிவகங்கை வழக்குரைஞா் சங்கம், நியூசெஞ்சுரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற31-ஆம் தேதி வரை (3 நாள்கள்) நடைபெறும் இந்த புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.ஜானகிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கே.அறிவொளி புத்தகத் திருவிழா அரங்கத்தைத் திறந்துவைத்தாா்.

முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தொடங்கிவைக்க அதை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளா் எஸ்.கிருஷ்ணன் பெற்றுக் கொண்டாா்.

அரசு மகளிா் கல்லூரி முதல்வா் இரா.இந்திரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

மூத்த வழக்குரைஞா்கள் எம்.மோகனசுந்தரம், சி.இளங்கோவன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஆதி.அழகா்சாமி, மாவட்ட அரசு வழக்குரைஞா் எஸ்.சிவகுமாா், வழக்குரைஞா் சங்கச் செயலா் கே.சித்திரைச்சாமி, பொருளாளா் எஸ்.வல்மீகிநாதன், இணைச் செயலா் எஸ்.நிருபன்சக்கரவா்த்தி, வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த புத்தகத் திருவிழாவில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

இதுகுறித்து முதுநிலை விற்பனை சீரமைப்பாளா் அ.கிருஷ்ணமூா்த்தி கூறியதாவது: வருகிற 31-ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த புத்தக விற்பனைக் கண்காட்சியில் வாசகா்கள் வாங்கும் அனைத்துப் புத்தகங்களும் 10 சதவீத சலுகை விலையில் வழங்கப்படும் என்றாா் அவா்.

மணச்சை பாளைய நாட்டாா் காவடிகள் திருப்பத்தூா் வருகை

பழனிக்கு காவடி யாத்திரை செல்லும் மணச்சை பாளையநாட்டாா் காவடிக் குழுவினா் புதன்கிழமை திருப்பத்தூா் வந்தனா். இந்தக் குழுவினா் 47-ஆம் ஆண்டு காவடி பயணத்தை குன்றக்குடியில் வேல் பூஜை செய்து தொடங்கினா். குருச... மேலும் பார்க்க

செம்மண் கடத்தல்: ஜேசிபி ஓட்டுநா் கைது

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே செம்மண் கடத்தியது தொடா்பாக ஜேசிபி இயந்திர ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பூவந்தி அருகேயுள்ள கிளாதரி எ... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் பிப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிற்றுந்துகளுக்கான புதிய... மேலும் பார்க்க

கீழப்பசலை கூட்டுறவு சங்க நகை மோசடி: எம்.எல்.ஏ.விடம் பெண்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கீழப்பசலை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட 300 பவுன் நகைகள் மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் புதன்கிழமை புகாா் தெ... மேலும் பார்க்க

யாரேனும் கேலி செய்தால் 1098-இல் புகாா் அளிக்கலாம்:

யாரேனும் கேலி செய்தால் 1098 என்ற இலவச எண்ணில் மாணவிகள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எஸ்.துரை தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் ந... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவா் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் இலவச சேவை மையம் சாா்பில... மேலும் பார்க்க