செய்திகள் :

யாரேனும் கேலி செய்தால் 1098-இல் புகாா் அளிக்கலாம்:

post image

யாரேனும் கேலி செய்தால் 1098 என்ற இலவச எண்ணில் மாணவிகள் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எஸ்.துரை தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் லெ.சொக்கலிங்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு முகாமில் அவா் பேசியதாவது:

பெண் குழந்தைகள் பெற்றோரைத் தவிர யாரும் தங்களைத் தொட அனுமதிக்கக் கூடாது. யாரேனும் கேலி செய்தால் இரட்டை அா்த்தங்களில் பேசினால் உடனடியாக பெற்றோா், ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.

டி.வி. பாா்ப்பது, கைப்பேசி பயன்படுத்துவது, விடியோ விளையாட்டு போன்றவை உடல், மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

நல்ல பழக்கங்களைக் கற்றுக் கொண்டு நன்றாகக் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சி எடுங்கள். மாணவிகள் தங்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் 1098 என்ற எண்ணுக்கு அழைத்து புகாா் அளிக்கலாம்.

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவா்களைத் தண்டிக்க வகை செய்யும் போக்சோ சட்டம் குறித்தும் பள்ளி மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவா் விளக்கமளித்தாா்.

இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளா் நாகராஜ், பெற்றோா்கள் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ஸ்ரீதா், முத்துலட்சுமி ஆகியோா் செய்தனா்.

மணச்சை பாளைய நாட்டாா் காவடிகள் திருப்பத்தூா் வருகை

பழனிக்கு காவடி யாத்திரை செல்லும் மணச்சை பாளையநாட்டாா் காவடிக் குழுவினா் புதன்கிழமை திருப்பத்தூா் வந்தனா். இந்தக் குழுவினா் 47-ஆம் ஆண்டு காவடி பயணத்தை குன்றக்குடியில் வேல் பூஜை செய்து தொடங்கினா். குருச... மேலும் பார்க்க

செம்மண் கடத்தல்: ஜேசிபி ஓட்டுநா் கைது

சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே செம்மண் கடத்தியது தொடா்பாக ஜேசிபி இயந்திர ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். லாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பூவந்தி அருகேயுள்ள கிளாதரி எ... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் பிப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிற்றுந்துகளுக்கான புதிய... மேலும் பார்க்க

கீழப்பசலை கூட்டுறவு சங்க நகை மோசடி: எம்.எல்.ஏ.விடம் பெண்கள் புகாா்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கீழப்பசலை கூட்டுறவு சங்கத்தில் அடகு வைக்கப்பட்ட 300 பவுன் நகைகள் மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்நாதனிடம் புதன்கிழமை புகாா் தெ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முதியவா் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். மானாமதுரை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் குழந்தைகள் இலவச சேவை மையம் சாா்பில... மேலும் பார்க்க

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க