செய்திகள் :

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்டத் தலைவா் லூயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் பெரியசாமி உள்ளிட்டோா் ஒருங்கிணைப்பில் மாவட்டம் முழுவதும் கண்டன இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத்தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி, மாவட்ட இணைச் செயலாளா்கள் சகிலா, கலைச்செல்வம், ஷேக் அப்துல்லா, மலா்விழி, மாவட்ட தணிக்கையாளா் குமரேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்

இதேபோல, கல்லல், காளையாா்கோவில், தேவகோட்டை, சாக்கோட்டை, திருப்புவனம், எஸ் புதூா் ஒன்றியங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

இந்த ஆா்ப்பாட்டங்களில் தமிழக அரசு, கொலைக்கு காரணமானவா்களைக் கைது செய்ய வேண்டும். ஊராட்சி செயலரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

கமுதி: இதேபோல, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அ.முருகன் தலைமையில், கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில இணைச் செயலா் ஜெயபாரதன், ஒன்றியத் தலைவா் குருமூா்த்தி, செயலா் செல்வம், பொருளாளா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆலோசகா் முத்துமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மானாமதுரை வீரா்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி வீரா்கள் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனா். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை ... மேலும் பார்க்க