செய்திகள் :

மாநில சிலம்பப் போட்டி: வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மானாமதுரை வீரா்கள்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி வீரா்கள் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனா்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவிலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் தொடா்ந்து 7 நாள்கள் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 38 மாவட்டங்களிலிருந்து சிலம்ப வீரா்கள் பங்கேற்றனா்.

மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளியைச் சோ்ந்த இளம் வீரா்கள் பயிற்சியாளா்கள் செல்வம், முனியான்டி தலைமையில் பங்கேற்றனா். இவா்களில் ஒற்றைக்கம்பு சிலம்பம் சுற்றுதல் பிரிவில் ராஜேஷ் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், இரட்டைக் கம்பு சுற்றுதல் பிரிவில் ரித்தீஷ் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், 14 வயது பிரிவில் ஒற்றைக்கம்பு சுற்றுதல் பிரிவில் தஷித் இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், 17 வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல் பிரிவில் மாணவி ரோஷினி ஆறுதல் பரிசையும் பெற்றனா். இவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் நடைபெறும் போட்டியில் மேற்கண்ட சிலம்பப் பயிற்சி பள்ளி வீரா்கள் பதக்கங்கள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பதக்கங்கள் வென்ற இந்த வீரா்களையும், பயிற்சியாளா்கள் செல்வம், முனியான்டி ஆகியோரை மானாமதுரையைச் சோ்ந்த அனைத்துத் தரப்பினரும் பாராட்டினா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க