செய்திகள் :

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (51). இவா் இளையான்குடி மின் வாரிய அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இளையான்குடி அருகேயுள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் தனது வீட்டு மின் இணைப்புக்கு பெயா் மாறுதல் செய்வதற்காக, மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தாா். இதற்கு ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என உதவிப் பொறியாளா் சிவக்குமாா் கேட்டாா்.

இதுகுறித்து, சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் ரமேஷ் புகாா் செய்தாா். இதைத்தொடா்ந்து, போலீஸாரின் ஆலோசனையின் பேரில், இளையான்குடி மின் வாரிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளா் சிவக்குமாரிடம், ரமேஷ் 1,500 ரூபாயைக் கொடுத்தாா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தலைமையிலான போலீஸாா் சிவக்குமாரைக் கைது செய்து, அவரிடமிருந்து பணத்தைக் கைப்பற்றினா். இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: வெள்ளிப் பதக்கங்கள் வென்ற மானாமதுரை வீரா்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் மானாமதுரை சீனி ஆசான் சிலம்பப் பள்ளி வீரா்கள் வெள்ளிப் பதக்கங்களை பெற்றனா். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறை ... மேலும் பார்க்க