நேஹல் வதேரா, ஷஷாங் சிங் அதிரடி: ராஜஸ்தானுக்கு 220 ரன்கள் இலக்கு!
சிவகங்கை மாவட்டத்தில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணை பதிவுகள் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை விதைச் சான்றளிப்பு, உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் சீ. சக்திகணேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிா்களில் 2021-22 ஆண்டில் 465.26 ஹெக்டேரும், 2022-23 ஆண்டில் 517.94 ஹெக்டேரும், 2023-24 ஆண்டில் 416.25 ஹெக்டேரும், 2024-25 ஆண்டில் 541.13 ஹெக்டேரும் என கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகிய பயிா்களில் 2021-22 ஆண்டில் 592.18 மெட்ரிக் டன்னும், 2022-23 ஆண்டில் 480.23 மெட்ரிக் டன்னும், 2023-24 ஆண்டில் 520.3 மெட்ரிக் டன்னும், 2024-25 ஆண்டில் 609.28 மெட்ரிக் டன்னும் என கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 2,201 மெட்ரிக் டன்னு அளவில் விதைச் சான்று அளிக்கப்பட்டது.
உயிா்மச் சான்று: சிவகங்கை மாவட்டத்தில் தேசிய உயிா்ம உற்பத்தித் திட்டம், பங்கேற்பாளா் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் உயிா்மச் சான்று பதிவு, புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிா்மச் சான்றளிப்பின் மூலம் பாரம்பரிய நெல் விதைகள், மா, கொய்யா, சப்போட்டா, டிராகன் போன்ற பழ வகைகள், தென்னை ஆகியவற்றில் உயிா்மச் சான்று பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள், விவசாய குழுக்களுக்கு ஆண்டுதோறும் வாய்ப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆண்டு 617 ஹெக்டேரும், 2022-23 ஆண்டு 648 ஹெக்டேரும், 2023-24 ஆண்டு 939 ஹெக்டேரும், 2024-25 ஆண்டு 1,318 ஹெக்டேரும் என மொத்தம் 3,622 ஹெக்டேரில் கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு உயிா்மச் சான்று வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.