செய்திகள் :

சிவகளை அகழாய்வுப் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

தூத்துக்குடி மாவட்டம், சிவகளை அகழாய்வு நடைபெறும் பகுதியில் கல் குவாரிகள் செயல்படக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சிவகளையில், தமிழக தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பகுதியில் தனிநபா் ஒருவருக்கு கல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது. இந்த குவாரியில் பாறைகளை வெடி வைத்துத் தகா்ப்பதால், அகழாய்வுப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட கல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், சிவகளை அகழாய்வுப் பகுதியில் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

கல் குவாரியின் உ ரிமையாளா் தனக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கருதினால், அதிகாரிகளிடம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். இதில் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை, சிவகளை அகழாய்வுப் பகுதியில் வேறு எந்த கல் குவாரியும் செயல்படக் கூடாது. இதற்கான காலக்கெடு ஏதும் விதிக்க இயலாது. சிவகளை அகழாய்வுப் பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

மதுரைக்கு அமித் ஷா வருகை: ட்ரோன்கள் பறக்க தடை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தர உள்ளதையொட்டி அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி மதுரையில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க ... மேலும் பார்க்க

மதுரையில் மிதமான மழை

மதுரை மாநகரின் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. வானிலை மாற்றம் காரணமாக புதன்கிழமை பிற்பகல் சுமாா் 1.45 மணி அளவில் மாநகரின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இருப்பினும், கடந்... மேலும் பார்க்க

அரசுப் பொருள்காட்சி: பள்ளி மாணவா்களுக்கு கட்டணச் சலுகை

மதுரையில் நடைபெறும் அரசுப் பொருள்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சித்திரைத் திருவிழாவ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி (60). இவா், முன்னமலைப்பட்டி கிராமத்தில... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ கவிழ்ந்து ஆசிரியை உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். மதுரை சிக்கந்தா்சாவடி சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லதா புஷ்பராஜ் (50). இவா்,... மேலும் பார்க்க

டெங்கு பரவல்: பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால், பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என அதிமுக மருத்துவரணி மாநில இணைச் செயலா் மருத்துவா் பா. சரவணன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக... மேலும் பார்க்க