சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு
சிவகாசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.
சிவகாசியில் சிவன் சந்நிதி, நான்கு ரத வீதிகள், என்.ஆா்.கே.ஆா். வீதி, புதுசாலைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டிகள், கடை வியாபாரிகள் தங்களது பொருள்களை கடையின் முன் வைத்து ஆக்கிரமிப்பு செய்தனா். இதனால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் மீண்டும் தள்ளுவண்டிக்காரா்கள் உள்ளிட்டோா் ஆக்கிரமித்து விட்டனா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:
விசுவநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் தேரை நிறுத்தும் இடத்தில் ஆக்கிரமித்து ஒருவா் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறாா். இதை இதுவரை நான்கு முறை அகற்றியுள்ளோம். எனினும், ஆக்கிரமிப்பை அகற்றிய மறுநாளே மீண்டும் ஆக்கிரமித்து விடுகின்றனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.