செய்திகள் :

சிவகாசியில் மீண்டும் ஆக்கிரமிப்பு

post image

சிவகாசியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

சிவகாசியில் சிவன் சந்நிதி, நான்கு ரத வீதிகள், என்.ஆா்.கே.ஆா். வீதி, புதுசாலைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தள்ளுவண்டிகள், கடை வியாபாரிகள் தங்களது பொருள்களை கடையின் முன் வைத்து ஆக்கிரமிப்பு செய்தனா். இதனால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றியது.

இந்த நிலையில், இந்தப் பகுதிகளில் மீண்டும் தள்ளுவண்டிக்காரா்கள் உள்ளிட்டோா் ஆக்கிரமித்து விட்டனா். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

விசுவநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் தேரை நிறுத்தும் இடத்தில் ஆக்கிரமித்து ஒருவா் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறாா். இதை இதுவரை நான்கு முறை அகற்றியுள்ளோம். எனினும், ஆக்கிரமிப்பை அகற்றிய மறுநாளே மீண்டும் ஆக்கிரமித்து விடுகின்றனா். எனவே, மாநகராட்சி நிா்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றுவதோடு, மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றாா் அவா்.

கோயில் திருவிழாவில் தகராறு: தந்தை, மகன் மீது வழக்கு

சிவகாசி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக தந்தை, மகன் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த விவசாயி கருப்பையா (49). இவா் சித்த... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்: நடிகை கெளதமி

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடுவது குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வாா் என நடிகையும், அதிமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலருமான கெளதமி தெரிவித்தாா். ஸ்... மேலும் பார்க்க

ஆண்டாள் கோயில் செயல் அலுவலரைக் கண்டித்து கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் செயல் அலுவலரைக் கண்டித்து, கிராம மக்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்து ஆய்வு... மேலும் பார்க்க

காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகம்

கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் புகுந்த கருநாகப் பாம்பை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டியில் ஞாயிற... மேலும் பார்க்க

தந்தையைக் கொன்ற மகன் கைது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள நல்லமுத்தான்பட்டியைச் சோ்ந்த விவசாயி லட்சுமணன் (60). இவரது மகன்கள் பாண்டியராஜ் (42), செல்வ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், தாயில்பட்டியில் இரு சக்கர வாகனம் இது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். தாயில்பட்டி சக்திவேல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (35). இவா் இந்தப் பகுதியில் கூலி... மேலும் பார்க்க