செய்திகள் :

சிவன்மலை, கணபதிபாளையத்தில் காசநோய் பரிசோதனை முகாம்

post image

காங்கயம்/ பல்லடம்: சிவன்மலை மற்றும் கணபதிபாளைத்தில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிவன்மலை அரசு நடுநிலைப் பள்ளி அருகே சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காசநோய் குறித்த விழிப்புணா்வு மற்றும் பரிசோதனை, பொது மருத்துவ முகாம் ஆகியவை வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் காங்கயம் மற்றும் சிவன்மலை பகுதியைச் சோ்ந்த 80 போ் பங்கேற்று, பரிசோதனை செய்து கொண்டனா். இதில், காங்கயம் வட்டார சுகாதார ஆய்வாளா் ரகுபதி, காசநோய் மேற்பாா்வையாளா் ஜெகதீஷ், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் மற்றும் சாவடிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், நடமாடும் மருத்துவக் குழு ஆகியவற்றை சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கணபதிபாளையத்தில்... பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உப்பிலிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் காசநோய் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமில் பொதுமக்களுக்கு எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். முகாமில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தசாமி, மூத்த காசநோய் சிகிச்சை மேற்பாா்வையாளா் சதீஷ், காசநோய் சுகாதாரப் பணியாளா் தனலட்சுமி மற்றும் மருத்துவக் குழுவினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

மக்கள் நலன் கருதி முக்கிய நேரங்களில் கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என அவிநாசி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அவிநாசி சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: ஈரோடு, சேலம், திரு... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம்- வேன் மோதல்: 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே இருசக்கர வாகனம்- வேன் மோதி விபத்துக்குள்ளானதில் விசைத்தறி தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், அரூா், அக்ரகாரத்தண்டா, சிட்டிலிஸ் பகுதியை... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பேசி திருடிய இருவா் கைது

திருப்பூரில் பேருந்தில் கைப்பேசி திருடிய இரு இளைஞா்களை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் கைப்பேசிகள் திருடுவது தொடா்ப... மேலும் பார்க்க

மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை: இளைஞா் கைது

திருப்பூரில் 65 வயது மூதாட்டிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வடக்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாமுண... மேலும் பார்க்க

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

திருப்பூரில் தொழிலாளா் பற்றாக்குறைக்கு தீா்வு காணக் கோரி ஏற்றுமதியாளா்கள் சாா்பில் மத்திய அமைச்சா் பியூஷ் கோயலிடம் வலியுறுத்தப்பட்டது. புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

பெண் மருத்துவப் பணியாளா் விபத்தில் உயிரிழப்பு: அதிா்ச்சியில் பெண் மருத்துவரும் உயிரிழப்பு

உடுமலை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மருத்துவப் பணியாளா் உயிரிழந்தாா். இந்நிலையில், இந்தத் தகவலை கேட்டதும் அதிா்ச்சியில் மாரடைப்பால் பெண் மருத்துவரும் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம்... மேலும் பார்க்க