சிவாலயங்களில் பிரதோஷம்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள சிவாலயங்களில் புதன்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்துக்குள்பட்ட சிவகாமி அம்மன் உடனாய திருத்தளிநாதா் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு, மாலை 4 .30 மணியளவில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், பன்னீா், இளநீா், அரிசி மாவு உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மூலவருக்கும் 16 வகை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, உற்சவா் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளி ஹர ஹர சிவசிவ மந்திரங்கள் முழங்க வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்தாா். சிவாசாரியா்கள் பூஜைகளை மேற்கொண்டனா்.
இதேபோல, ஆதித்திருத்தளிநாதா் ஆலயத்திலும் நந்திக்கும் மூலவருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கல்வெட்டு மேடு சுயம்பு லிங்கேஸ்வா் ஆலயத்திலும் பிரதோஷம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரதோஷ குழுவினரால் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை பிரதோஷ குழுவினா் செய்தனா்.