செய்திகள் :

சிவ (நவ) தாண்டவம்

post image

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்தத் தாண்டவங்களிலிருந்து நவ துர்கை தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.

ஆனந்த தாண்டவம்: வலக்காலை ஊன்றி, இடக்காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷி மண்டல கோலத்தில் தோன்றியவள் ஸ்ரீ சைலபுத்திரி.

சந்தியா தாண்டவம்: பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் இடக்கால் விரலால் சிவனார் இடும் கோலம் சப்த ஒலிக் கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.

திரிபுர தாண்டவம்: ஈசனின் இடக்கால் பெருவிரலால் வரையப்பட்டது அஷ்ட வகை கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.

ஊர்த்துவ தாண்டவம்: திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியைத் தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவ கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்திர காந்தா தேவி.

புஜங்க தாண்டவம்: பாற்கடலின் ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தைப் பிடித்து, விஷம் உள்ளே இறங்காமல் தடுத்தார் பார்வதி. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்னும் பெயர் உண்டு. அப்போது ஏற்பட்ட புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்த மாதா.

முனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.

பூததாண்டவம்: கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்திரி.

சுத்த தாண்டவம்: தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம் . இதில் தோன்றியவர் மகாகெüரி.

சிங்கார தாண்டவம்: நவரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம். இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்திரி.

மகாலட்சுமி சுப்ரமணியன், காரைக்கால்.

குறை தீர்க்கும் குமரன்

புதுச்சேரி மாநகரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலாகத் திகழ்கிறது, சாரம் சுப்பிரமணியர் ஆலயம். பழைமையான மயிலம் முருகனை, ஆண்டு தோறும் மாசிமகத்திற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்யும் ஆலயமாக இது விளங்குகின்... மேலும் பார்க்க

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (செப்டம்பர் 19 - 25) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)அனைவரிடம் ... மேலும் பார்க்க

மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!

கொங்கு நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக் கூவல்நாடு. இதை காஞ்சிக் கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக் கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகி... மேலும் பார்க்க

கல்யாண சுப்பிரமணியர்!

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள மத்யார்ஜுனம் எனப்படும் இடைமருதூர் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் அதற்கு நேர் எதிரிலேயே காவிரி வடகரையில் அமைந்துள்ள ஆதிமத்யார்ஜுனம் இன்னும் அறியப்படாத ஒன்றாகவே இருக்கி... மேலும் பார்க்க

கவலைகளைப் போக்கும் மாரியம்மன்

திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அவிநாசிக்கு மேற்கில், அன்னூர் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கருவலூர். இங்குள்ள கருமாரியம்மன் கோயில், புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று.அவிநாசி ... மேலும் பார்க்க

திருமணம் கைகூடும் திருநல்லம்

ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவர் வாழ்விலும் திருமணம் என்பது இனிமையான, இன்றியமையாத நிகழ்வாகும். திருமணம் கைகூடும் திருநல்லம் எனப் புராணங்கள் புகழும் நாகை மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் உள்ளது அருள்மிகு உமாமகேஸ்வரர... மேலும் பார்க்க