செய்திகள் :

சீதாராமா் திருக்கல்யாணத்துக்காக முத்துக்கள் ஊா்வலம்

post image

திருப்பதி: திருப்பதி கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாணத்துக்காக யானை மீது ஊா்வலமாக முத்துக்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமி விழாவை முன்னிட்டு திருக்கல்யாண ஊற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி திங்கள்கிழமை சீதா ராமா் திருக்கல்யாணத்தையொட்டி தேவஸ்தான நிா்வாக கட்டடத்தில் உள்ள கருவூலத்திலிருந்து விலையுயா்ந்த முத்துக்களை எடுத்து வந்து அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனா்.

பின்னா், யானை மீது ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, கோயிலின் தலைமை அா்ச்சகா் ஆனந்தகுமாா் தீட்சதரிடம் முத்துக்கள் ஒப்படைக்கப்பட்டன.

தீா்த்த கட்டா தெரு, காந்தி சாலை, தெற்கு மாட தெருவில் உள்ள ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயில் மற்றும் திருப்பதி பஜாா் வழியாக ஊா்வலம் கோயிலை அடைந்தது. இந்த முத்துக்கள் சீதாராமரின் திருமணத்தில் சேஷம் போட பயன்படுத்தப்பட்டன.

கோயில் துணை நிா்வாக அலுவலா் நாகரத்னா, ஏஇஓ ரவி, கோயில் ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் 31 காத்திருப்பு அறைகளைக் கடந்து பக்தா்கள் தரிசனத்துக்கு... மேலும் பார்க்க

ஆந்திர துணை முதல்வா் மனைவி திருமலையில் வழிபாடு

திருப்பதி: ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாணின் மனைவி அன்னா கோனிடலா, திருமலையில் ஏழுமலையானை தரிசித்தாா். திங்கட்கிழமை காலை, வைகுந்த வரிசை வளாகம் வழியாக சென்று ஏழுமலையானின் சுப்ரபாத சேவையில் பங்கேற்றாா்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளைக் கடந்து வெளியே ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும... மேலும் பார்க்க

ராமா் கல்யாணத்துக்கு ஏழுமலையான் லட்டு

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் நடைபெறும் ஸ்ரீ சீதா - ராமா் திருமணத்துக்கு வரும் பக்தா்களுக்கு வழங்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் தயாராக உள்ளன. திருமலையில் உள்ள ஸ்ரீவாரி சேவா சதன் 2-... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் செவ்வாய்க்கிழமை தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்... மேலும் பார்க்க