செய்திகள் :

சீனாவுடன் மீண்டும் வர்த்தகம்? டிரம்ப்பின் பேச்சால் இந்தியா ஏமாற்றம்!

post image

சீனாவில் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சீன பொருள்கள் மீதான 10 சதவிகிதம்வரையிலான வரி உயர்வு, சீன செயலியான டிக் டாக் செயலிக்கு தடை, தைவான் விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடு, ஹுவாய் நிறுவனத்தின் பொருள்களுக்கு கட்டுப்பாடு முதலான அமெரிக்காவின் செயல்பாடுகளால் சீனா மிகவும் பாதிப்படைந்துள்ளது.

மேலும், சீனா மீதான வரியை 25 சதவிகிதத்துக்கு உயர்த்தவிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக, உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ள மரக்கட்டை ஏற்றுமதியைக் குறிவைத்து, வரி உயர்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர்கள் வரலாற்றில் சீனாவை இந்தளவுக்கு சீண்டி பார்க்கும் ஒரே அதிபர் டிரம்ப்தான் என்று சிலர் கூறி வருகின்றனர்.

இதையும் படிக்க:சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சீனாவுக்கு அதிகளவில் அமெரிக்கா தொல்லை கொடுத்து வந்தாலும், சீனா தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அமெரிக்காவுக்கு தேவைப்படும் பொருள்களில் 18 சதவிகிதம், சீனாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. சுமார் ரூ. 3.06 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதியாகும் அமெரிக்காவுடனான வர்த்தக உறவை சீனா கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்த நிலையில்தான், சீனாவில் இருந்த அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறுவதற்கு திட்டமிருந்தன. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு மாறினால், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரமும் உயரும்.

இதற்கிடையே, சீனாவுடன் மீண்டும் வர்த்தகம் செய்யத் தயார் என்று டிரம்ப் கூறியிருப்பது சர்வதேச வர்த்தக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாறவிருந்த அமெரிக்க நிறுவனங்கள், தங்கள் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டன.

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 போ்: மீட்புப் பணிகள் தீவிரம்

தெலங்கானாவில் நீா்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததில் 2 பொறியாளா்கள் உள்பட 8 போ் உள்ளே சிக்கிக் கொண்டனா். அவா்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெலங்கான... மேலும் பார்க்க

வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவு: தனது நண்பா் டிரம்ப்பின் கருத்தை பிரதமா் கேட்க வேண்டும் -காங்கிரஸ்

‘தோ்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு ஆதரவாக தனது நண்பா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு பிரதமா் மோடி செவிசாய்க்க வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தங்களிடையே நெருங்கிய நட்புற... மேலும் பார்க்க

சமூக ஊடக பதிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: மத்திய அரசு பரிசீலனை

சமூக ஊடக தளங்களில் சா்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்படுவதை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் கொண்டுவருவதன் அவசியம் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் சனிக்கி... மேலும் பார்க்க

உண்மையான சிவசேனை, தேசியவாத காங். யாா்?: மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வெற்றியில் மக்கள் பதில் -அமித் ஷா

‘உண்மையான சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் யாா் என்பதற்கு மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் வெற்றியின் மூலம் மக்கள் தெளிவான பதிலளித்துள்ளனா்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தாா். மகாரா... மேலும் பார்க்க

என்சிஇடி நுழைவுத் தோ்வு: விண்ணப்பப்பதிவு தொடக்கம்

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியா் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தோ்வுக்கு மாணவா்கள் மாா்ச் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒருங்கிணைந்த 4 ஆண்ட... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே சிறந்த நட்புறவு: வெளியுறவு அமைச்சகம்

‘சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா-பூடான் திகழ்கிறது’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது. இந்தியாவுக்கு பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டதே இரு நாடுகள... மேலும் பார்க்க