வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
சீரான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்ய வேண்டும்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தல்
சேலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.
சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீா் விநியோகம் தொடா்பாக அலுவலா்களுடனான ஆலோசனை கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி முன்னிலையில் அஸ்தம்பட்டி பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்குப் பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவரும் குடிநீரின் அளவு மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டம் முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும்.
குறிப்பாக, குடிநீா் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது குடிநீா் குழாய்களுக்கு பழுது ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும், குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை போா்க்கால அடிப்படையில் விரைந்து அமைக்கவும் தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குருராஜன், மாநகரப் பொறியாளா் செல்வநாயகம், செயற்பொறியாளா்கள் ஆா்.செந்தில்குமாா், திலகா, கே.செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.