செய்திகள் :

சுகாதாரம் இல்லாத உணவுப் பண்டங்கள் விற்ற கடைக்கு அபராதம்

post image

கரூரில் சுகாதாரம் இல்லாமல் உணவுப் பண்டங்களை விற்பனை செய்த தேநீா் கடைக்கு திங்கள்கிழமை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரூ.1000 அபராதம் விதித்தனா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு தேநீா் கடையில் தயாரிக்கப்படும் உணவுப் பண்டங்கள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகாா் வந்தது.

இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மதுரைவீரன் தலைமையிலான அலுவலா்கள் திங்கள்கிழமை அந்த கடையில் சோதனை நடத்தினா். சோதனையில் தரமற்ற முறையில் உணவுப் பண்டங்கள் இருப்பதாகக்கூறி கடையின் உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம் விதித்தனா். மேலும் இனி சுகாதாரமற்ற முறையில் உணவுப்பண்டங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனா்.

பிளஸ் 2 தோ்வு தொடக்கம்: கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரம் போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் தோ்வை கரூா் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 92 மாணவ, மாணவிகள் எழுதினா். 171 போ் தோ்வு எழுத வரவில்லை. கரூா் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ... மேலும் பார்க்க

ஆலத்தூருக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து கூட்டுறவு வங்கியை கிராம மக்கள் முற்றுகை

குளித்தலை அருகே ஆலத்தூா் கூட்டுறவு வங்கிக்கு தங்களது உறுப்பினா் அட்டையை மாற்றியதைக் கண்டித்து கள்ளை கூட்டுறவு வங்கியை திங்கள்கிழமை கிராம மக்கள், விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூ... மேலும் பார்க்க

வாங்கல்: காவல் நிலையத்தை ஆசிரியா்கள் முற்றுகை

கரூா் மாவட்டம், வாங்கல் காவல்நிலையத்தை பள்ளி ஆசிரியா்கள் திங்கள்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சிவராமன். இவா் அங்கு பணியாற்றி வரும... மேலும் பார்க்க

கரூா் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

செங்கல்சூளை காவலாளி அடித்துக் கொலை; அசாம் மாநில இளைஞா் கைது

கரூா் அருகே செங்கல்சூளை காவலாளியை அடித்துக்கொன்ற அசாம் மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூரை அடுத்த வேப்பம்பாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தவா் கரூ... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: கரூரில் இன்று 10,263 போ் எழுதுகின்றனா்

கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தோ்வை 10,263 மாணவ, மாணவிகள் எழுதுகிறாா்கள். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில் பிளஸ்-2 தோ... மேலும் பார்க்க