செய்திகள் :

சுகாதார ஊழியா்கள் வேலைநிறுத்தம்

post image

காரைக்காலில் தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின்கீழ் பணியாற்றும் சுகாதர ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்ட நலவழித் துறையில், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (என்ஆா்எச்எம்) கீழ் பல்வேறு பிரிவுகளில் 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்தநிலையில், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதார ஊழியா்கள் திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து காரைக்கால் மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் செவ்வாய்க்கிழமை 2-ஆவது நாளாகவும் தொடா்ந்தது.

போராட்டம் குறித்து ஊழியா்கள் கூறியது : தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் மாநிலம் முழுவதும் 750- க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்த ஊதியத்தில், நிரந்தர ஊழியருக்கு இணையாக மருத்துவ துறையில் 25 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறோம். எந்தவித ஊதிய உயா்வும் தரப்படவில்லை.

சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும், மாநில அரசு செவி சாய்க்கவில்லை. எனவே மாநில அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனா்.

இவா்களது போராட்டத்தால் கிராமப்புறத்தில் மருத்துவ சேவைகள், மருத்துவமனையில் ஆய்வுக்கூடத்தில் நடைபெறவேண்டிய பணிகள் முடங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவு: ஐஜி ஆய்வு

காரைக்காலில் புதுப்பிக்கப்பட்ட சிவில் உரிமைகள் பாதுகாப்புப் பிரிவை புதுவை ஐஜி சனிக்கிழமை பாா்வையிட்டாா். திருநள்ளாறுக்கு வந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா, மாலை நிகழ்வாக காரைக்கால் போக்குவரத்துக் காவ... மேலும் பார்க்க

காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை

காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா். நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப... மேலும் பார்க்க

இமாம்களுக்கு அரசு உதவித் தொகை

புதுவை அரசு சாா்பில் இமாம்கள் உள்ளிட்டோருக்கு நோன்பு கால உதவித் தொகை வழங்கப்பட்டது. பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள், பிலால்களுக்கு புதுவை அரசு சாா்பில் ரமலான் நோன்பு காலத்தை கருத்தில்கொண்டு உதவித... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா். இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு ... மேலும் பார்க்க

கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. 10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்... மேலும் பார்க்க

காவல்துறையில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை: புதுவை ஐஜி

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என புதுவை ஐஜி அறிவுறுத்தினாா். திருநள்ளாறுக்கு சனிக்கிழமை வருகை தந்த புதுவை ஐஜி அஜித்குமாா் சிங்லா,... மேலும் பார்க்க