செய்திகள் :

சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மூத்த மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2019-ல் திருவண்ணாமலையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு அருகிலுள்ள மாம்பாக்கம் அரசு சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபினனர் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ. 5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதையும் படிக்க | கவனம்! தமிழகத்தில் இணையவழி பணமோசடிகள் 2.5 மடங்கு அதிகரிப்பு!!

இதுதொடர்பாக வழக்கில் இன்று, கர்ப்பிணிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட மொத்தம் 8 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கு இம்பால் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட இயக்கமான காங்லெ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் குறைந்தது மீன்கள் விலை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரத்து அதிகரித்ததால் மீன்கள் விலை சனிக்கிழமை குறைந்து காணப்பட்டது.தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளம... மேலும் பார்க்க

நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்!

நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கியது. பயணச்சீட்டு விலைக் குறைப்பு, கப்பலில் காலை, மதிய உணவு இலவசம் என பயணிகளை ஈர்க்க கப்பல் நிறுவனம் சலுகைகளை அறிவித்த... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 'விம்கோ நகர் ரயில் நிலையத்தில... மேலும் பார்க்க

வழியெங்கும் திரண்டு வாரியணைத்துக் கொண்ட கடலூர்!

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறாா். அந்த வகையில், 2 நாள் பயணமாக கடலூருக்கு வெள்ளிக்கிழமை (பிப்.21) வருகை தந்த முதல்வருக்... மேலும் பார்க்க

பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எஃப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் பதவியேற்பு!

அமெரிக்க எஃப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அத... மேலும் பார்க்க