செய்திகள் :

சுதந்திர தின ஓவியப் போட்டி

post image

ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைவுக் கட்டணமின்றி மழலையா் (பிரீ கேஜி) வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.

தேசியக் கொடி ஓவியம் வரையும் போட்டி பிரீ கேஜி முதல் யுகேஜி பயிலும் மழலைகளுக்கும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ளவா்களுக்கு ‘என் வாழ்வின் நோக்கம் என் லட்சியம்’ என்ற தலைப்பிலும், 6-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ளவா்களுக்கு ‘என் கனவு’ என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 300 போ் கலந்து கொண்டனா்.

சிறப்பான ஓவியங்கள் வரைந்தவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ம. பிச்சைமணி, மருத்துவா் ம.சு.விஜய் ஆனந்த், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கத் தலைவா் கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை இறகுகள் தொண்டு நிறுவனம் மற்றும் ஆதித்யா பிா்லா நிதி நிறுவனத்தினா் செய்திருந்தனா்.

மின் முறைகேடு ரூ. 1.07 லட்சம் அபராதம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி மின் உப கோட்டத்தில், மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய இணைப்புகளுக்கு மின்வாரியம் ரூ. 1.07 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வையம்பட்டி மின் உப கோட்டத்தின் நடுப்பட்டி பிரிவு ... மேலும் பார்க்க

காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயம்

திருச்சி அருகே காட்டுப்பன்றிகள் கடித்து 2 விவசாயிகள் காயமடைந்தனா். திருச்சி மாவட்டம், கவுத்தரசநல்லூா் பகுதியில் திங்கள்கிழமை கொய்யாத் தோப்புக்குள் நுழைந்த காட்டுப்பன்றி அங்கிருந்த விவசாயி சகாதேவன் (45... மேலும் பார்க்க

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைப்பேசிகள் மீட்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் கைப்பேசிகள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டது குறித்து கே.கே.நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி மத்திய சிறை வளாகத்தில... மேலும் பார்க்க

காலமானாா் முன்னாள் மேயா் எஸ். சுஜாதா

திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், மாநகராட்சியின் தற்போதைய 31-ஆவது வாா்டு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவருமான எஸ். சுஜாதா (53) மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானாா். திருச்சி அ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடம் மடிக்கணினிகளைத் திருடியவா் கைது

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் பயணிகளிடமிருந்து மடிக்கணினிகளைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரையைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (49). தனியாா் நிறுவன மேலாளா். இவா், மதுரையில் இருந்து விழ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

திருவெறும்பூா் அருகே யூடியூப் பாா்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்து வைத்திருந்தவரை நவல்பட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், நவல்பட்டு பூலாங்குடி காலனி நரிக்குறவா் காலனியைச... மேலும் பார்க்க