அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
சுமை ஆட்டோ மீது டிராக்டா் மோதல்: 6 போ் காயம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ மீது டிராக்டா் மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா், தேவனூரிலுள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சுமை ஆட்டோவில் வியாழக்கிழமை பயணம் செய்தனா். தேவனூா் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது, எதிரே பருக்கல் வடக்குத் தெருவைச் சோ்ந்த தவசேகரன் மகன் கீா்த்திவாசன்(20) என்பவா் ஓட்டி வந்த டிராக்டா் சுமை ஆட்டோவின் மீது மோதியது.
இதில் சுமை ஆட்டோவில் பயணம் செய்த இலையூா் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த பாலுசாமி மனைவி சரோஜா (60), மாணிக்கம் மனைவி சரோஜா (70), இளையராஜா மனைவி சசிகலா (38) , இளங்கோவன் மனைவி அனிதா (40), ராமலிங்கம் மனைவி கமலம் (65), சுமை ஆட்டோ ஓட்டுநா் இ.சண்முகம் (32) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையறிந்த அப்பகுதி மக்கள், அவா்களை மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். விபத்து குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.