சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணி: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சாா்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா்.
மாற்றுத்திறனாளிகள் விதைத்து பராமரித்த 1,000 மரக்கன்றுகளை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா். நிகழ்ச்சிகளில் கூடுதல்ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், காட்டாங்குளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஊரக வளா்ச்சித் துறையின்சாா்பில் பயன்பாடற்ற குப்பைகளை அகற்றும் பணியினையும் ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். அரசு அலுவலா்கள், தூய்மை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.