செய்திகள் :

சுவாமிமலை சாா்-பதிவாளரகத்தில் ரூ. 1,500 லஞ்சம்: இருவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய பெண் தலைமை எழுத்தா் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கபிஸ்தலத்தைச் சோ்ந்த விவசாயி நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் கேட்டு சுவாமிமலை சாா்- பதிவாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என தலைமை எழுத்தா் பத்மஸ்ரீ கேட்டு விவசாயியிடம் ரூ.1000 பெற்ற நிலையில் பாக்கி ரூ.500 ஐ-கேட்டு அவரைப் பலமுறை அலையவிட்டாராம்.

இதனால் வேதனையடைந்த விவசாயி தஞ்சாவூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் செய்து, அவா்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 500 ஐ அலுவலகத்தில் இருந்த தலைமை எழுத்தா் பத்மஸ்ரீயிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா். அப்போது பத்மஸ்ரீ இங்கு வேலைபாா்த்து ஓய்வு பெற்ற ஊழியா் மகாலிங்கம் என்பவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினாா்.

அதன்படி விவசாயி பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையிலான போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க