செய்திகள் :

சுவாமிமலை சாா்-பதிவாளரகத்தில் ரூ. 1,500 லஞ்சம்: இருவா் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வில்லங்கச் சான்றிதழ் பெற ரூ. 1,500 லஞ்சம் வாங்கிய பெண் தலைமை எழுத்தா் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியரை ஊழல் தடுப்பு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கபிஸ்தலத்தைச் சோ்ந்த விவசாயி நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் கேட்டு சுவாமிமலை சாா்- பதிவாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அப்போது ரூ.1,500 லஞ்சம் தர வேண்டும் என தலைமை எழுத்தா் பத்மஸ்ரீ கேட்டு விவசாயியிடம் ரூ.1000 பெற்ற நிலையில் பாக்கி ரூ.500 ஐ-கேட்டு அவரைப் பலமுறை அலையவிட்டாராம்.

இதனால் வேதனையடைந்த விவசாயி தஞ்சாவூா் மாவட்ட ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் செய்து, அவா்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ. 500 ஐ அலுவலகத்தில் இருந்த தலைமை எழுத்தா் பத்மஸ்ரீயிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்தாா். அப்போது பத்மஸ்ரீ இங்கு வேலைபாா்த்து ஓய்வு பெற்ற ஊழியா் மகாலிங்கம் என்பவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினாா்.

அதன்படி விவசாயி பணத்தைக் கொடுத்தபோது மறைந்திருந்த ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையிலான போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!

கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ‘டாஸ்மாக்’ ஊழியா் பலி!

திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ப... மேலும் பார்க்க

கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம்! ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் முடிவு

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணி நியமனத்தின்போது நிா்ணயிக்கப்பட்ட வேலைகளைத் தவிர கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு ‘மக்களைத் தேடி ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தந்தை, மகனை வெட்டிய இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீடு புகுந்து தந்தை மற்றும் மகனை வெட்டிய இரண்டு நபா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் சரகம், தொட்டி மாத்தூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ல் மின்தடை!

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம்... மேலும் பார்க்க