செய்திகள் :

சுவாமி சிலையைத் திருடிய 2 போ் கைது

post image

பல்லடம் அருகே சுவாமி சிலையைத் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் போலீஸாா் சேகாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் சனிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு மதுபோதையில் இருந்த 2 பேரிடம் சோதனை மேற்கொண்டபோது, பித்தளையில் செய்யப்பட்ட முருகா் சிலை வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அன்பித்திவாரி (26), ஒடிஸாவைச் சோ்ந்த 14 வயது சிறுவன் என்பதும், அருள்புரம் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், கரைப்புதூா் ஊராட்சி அருள்புரம் செந்தூரன் காலனியில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்த ஒன்னேகால் அடி பித்தாளை முருகா் சிலையைத் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த முருகா் சிலையைப் பறிமுதல் செய்தனா்.

மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடிநீா்க் குழாய்களைப் பதித்த பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டல அலுவலகத்தை முருகம்பாளைம் பகுதி பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்ட... மேலும் பார்க்க

காதலைக் கைவிட மறுத்ததால் தங்கையை அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது

பல்லடம் அருகே காதலைக் கைவிட மறுத்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் தண்டப... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் இலவச நீா்-மோா்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு இலவச நீா்-மோா் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். திருப்பூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல்

திருப்பூா் நந்தா நகரில் உள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளி... மேலும் பார்க்க

இனம் கண்டறியாத 20 பயனாளிகளின் இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூா் கண்டியன்கோவில் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளைக் கண்டறியாத நிலை ஏற்பட்டதால் 20 பேரின் பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.... மேலும் பார்க்க

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க