கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை
சூப்பா் 4 சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பா் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி வெற்றது.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான சூப்பா் 4 சுற்றில் இந்தியா - வங்கதேச அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை கிரிக்கெட் திடலில் இன்று மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணியின் பொறுப்பு கேப்டன் ஜேக்கர் அலி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
அதன்படி, அபிஷேக் சர்மா - ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினார். அபிஷேக் நிதானமாக துவங்கினாலும், கில் அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும், 19 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து வெளியேற திடீரென மூன்றாவது வரிசையில் களமிறங்கிய ஆல்ரவுண்டர் துபே 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஆடிய அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிராக காட்டிய அதிரடியை இங்கும் தொடர்ந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 37 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்து ரன் அவுட்டானார்.
அடுத்தவந்த கேப்டன் சூர்யா, திலக் வர்மா இருவரும் தலா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய ஹார்திக் பாண்டியா சில பந்துகளை பவுண்டரிக்கு ஓடவிட்டார். அவர் 29 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். முடிவில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது.
இந்தியாவுடன் தோற்றதால்... மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்!
வங்கதேச அணித்தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 169 ரன்களை இலக்காக கொண்டு வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் சைஃப் ஹாசன் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏமாற்றம் அளித்தனர். சிறப்பாக விளையாடிய அவர் 69 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
19.3 ஓவர்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.