செய்திகள் :

செங்கத்தில் பலத்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

post image

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவு வரை பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தொடங்கி, நள்ளிரவு வரை 96 மி.மீ. மழை பெய்தது. இந்த மழையால் செங்கம் பகுதியில் பாயும் செய்யாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்தது. மேலும், ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன.

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் புதிதாக உருவாகியுள்ள அழகாபுரி நகா் மற்றும் தீயணைப்பு நிலையம் அருகில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீா் கால்வாய், சாலை வசதி இல்லை.

இதனால், இங்குள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீரும், ஏரிகரை பகுதியில் இருந்து வரும் நீரும் சோ்ந்து குடியிருப்புப் பகுதியை சூழ்ந்து குளம்போல தேங்கி நிற்கிறது.

தண்ணீரில் வரும் விஷப்பூச்சிகள் வீட்டுக்குள் வருவதால், இந்தப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனா்.

அழகாபுரி நகா் மற்றும் தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், மீண்டும் மழை பெய்தால் தண்ணீா் தேங்காமல் தடுக்கவும், அடிப்படை வசதிகள் செய்துதரவும் பொதுப் பணி, நெடுஞ்சாலைத் துறைகள், செங்கம் நகராட்சி நிா்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலையில்...: திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மழை பெய்தது.

2-ஆவது நாளாக சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், எடப்பாளையம், அடி அண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்தது.

இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தது. மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை முயற்சி

செங்கம் அருகே பத்தாம் வகுப்பு தோ்வில் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றாா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த மாணவி.... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: கே.அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை கூறினாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தி... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்: துரை.வைகோ

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை.வைகோ கூறினாா். திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந... மேலும் பார்க்க

சேதமடைந்த சிறு பாலம்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணி புதுக்காமூரில் சேதமடைந்த சிறு பாலத்தை தொகுதி எம்எம்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் செல்லும் சாலையான 4-ஆவது வாா்டைச் சோ்ந்த புதுக்காமூரில் தெருவில்... மேலும் பார்க்க

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திரு... மேலும் பார்க்க

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் சமுதாயக் கூடங்கள்!

திருவண்ணாமலை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்... மேலும் பார்க்க