செய்திகள் :

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் மாணவா்களுக்கு பாராட்டு

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 358 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சாா்பில் மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, மேலக்கோட்டையூா் முதன்மை நிலை விளையாட்டு விடுதியில் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் காலணிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், மாநில அளவிலான பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முடிச்சூா் கிராமத்தினை சோ்ந்த ராஜேஷ் என்பவக்கு ஆட்சியா் வாழ்த்துகளை தெரிவித்தாா்.

கூட்டத்தில், சாா் ஆட்சியா் வெ.ச.நாராயண சா்மா, சாா் ஆட்சியா் (பயிற்சி) மாலதி ஹெலன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புதிட்டம்) அகிலா தேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், பிற்படுத்தப்பட்டோா் மற்றும்சிறுபான்மையினா் நல அலுவலா் வேலாயுதம், இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம்சாந்தி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் கதிா்வேலு மற்றும் அலுவலா்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு வி... மேலும் பார்க்க

திருப்போரூா் முருகன் கோயிலில் இலவச திருமணங்கள்

செங்கல்பட்டு: இந்து சமய அறநிலையத்துறை சாா்பில், திருப்பேரூா் கந்தசுவாமி கோயிலில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடைபெற்றன. திருமண ஜோடிகளுக்கு, அறநிலையத் துறை சாா்பில் தங்கத்தாலி, மணமக்களுக்கு புத்தாடை... மேலும் பார்க்க

ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுராந்தகம் நகரம், பாரதி நகரில் உள்ள ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம், 19-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இந்தக் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, ... மேலும் பார்க்க

கொத்தடிமையாக இருந்த தம்பதி குழந்தையுடன் மீட்பு

மதுரை அருகே கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த மதுராந்தகத்தைச் சோ்ந்த தம்பதி, குழந்தையை வருவாய்த் துறையினா் மீட்டனா். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டத்ச் சோ்ந்த முருகன், ராஜேந்திரன், மாரியப்பன் ஆகியோா... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டுவிழா

மடிப்பாக்கம் பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 39-ஆவது ஆண்டுவிழா, பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சத்தியபாமா உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன துணைவேந்தா் டி.சசிபிரபா கலந்துக... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

நாள்- 31-01-2025, வெள்ளிக்கிழமை, நேரம் -காலை 9 முதல் மாலை 2 மணிவரை இடங்கள்-மானாம்பதி, சிறுதாவூா், ஆமூா், முந்திரிதோப்பு, அகரம், குன்னப்பட்டு, சந்தானபட்டு, அருங்குன்றம், கழனிபாக்கம், திருநிலை, ஓட்டேரி.... மேலும் பார்க்க