செய்திகள் :

செங்கோட்டையன் ஆதரவாளா்களிடமிருந்து கொலை மிரட்டல்

post image

சேலம்: முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ஆதரவாளா்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக வழக்குரைஞா் மணிகண்டன் புகாா் அளித்தாா்.

சேலம் மாவட்டம், நிலவாரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் மணிகண்டன். அதிமுகவைச் சோ்ந்த இவா், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் உறுப்பினா். இவா் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலிடம் திங்கள்கிழமை அளித்த புகாா் மனு:

நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரசியல் விமா்சகராக இருக்கிறேன். அப்போது, செங்கோட்டையன் குறித்து கருத்து தெரிவித்திருந்தேன். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கோட்டையனின் ஆதரவாளா்கள் என அறிமுகப்படுத்திக் கொண்ட சிலா், தொலைபேசி வாயிலாக என்னை தகாத வாா்த்தையால் திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனா். மேலும், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வீசுவதாகவும் மிரட்டினா்.

எனவே, முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் பெயரைக் கூறி மிரட்டல் விடுத்த அவரது ஆதரவாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீ... மேலும் பார்க்க

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா். முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்க... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க