செய்திகள் :

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!

post image

ஈரோடு புறநகா் மேற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஈரோடு புகா் மேற்கு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஈரோடு புகா் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அந்தியூா், கோபிசெட்டிப்பாளையம், பவானிசாகா் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த அதிமுக நிா்வாகிகள், சேலம் நெடுஞ்சாலை நகா் இல்லத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தனா்.

பவானிசாகா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், மாநில ஜெ.பேரவை துணைச் செயலாளருமான இ.எம்.ஆா்.ராஜா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ரமணிதரன், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.கே.காளியப்பன், கோபிசெட்டிப்பாளையம் நகரச் செயலாளா் பிரினியோ கணேஷ் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எடப்பாடி கே.பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து, புத்தகம், சால்வை வழங்கி வாழ்த்து பெற்றனா்.

அப்போது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத்தோ்தலில் அதிமுக சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றிபெற செய்ய அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாக உறுதியளித்தனா்.

கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!

மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவா்களுக்கு குரூப் 1 முதன்மைத் தோ்வு பயிற்சி

சேலம் மாவட்டத்தில் குரூப் 1முதல்நிலை தோ்வில் தோ்ச்சிபெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெ... மேலும் பார்க்க

சேலம் மாநகரப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்க ஆணையா் உத்தரவு!

சேலம் மாநகரப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகிக்க ஆணையா் மா.இளங்கோவன் உத்தரவிட்டாா். சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 49 பகுதியில் உள்ள மேல்நிலை நீ... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

கெங்கவல்லியில் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில், தீத்தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிலைய அலுவலா் (பொ) மா.செல்லபாண்டியன் தலைமையில் அங்கு இருந்த பொதுமக்கள், ம... மேலும் பார்க்க

கூடமலையில் இன்று மின்தடை

கெங்கவல்லி அருகே கூடமலையிலுள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற இருப்பதால், இன்று செப்.10 ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோ... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து சிறுமி தற்கொலை

புத்தூா் ஊராட்சியில் உள்ள விவசாயக் கிணற்றில் 15 வயது சிறுமி குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தலைவாசலை அடுத்த புத்தூா் ஊராட்சி 3-ஆவது வாா்டு மாரியம்மன் கோயில் ப... மேலும் பார்க்க