செய்திகள் :

செஞ்சி: `காசிருந்தா கழிவறையைப் பயன்படுத்துங்க..' - பொது கழிவறையில் கட்டண `அடாவடி!'

post image

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வரும் பெரும்பாலானோர் கட்டண கழிவறையையே பயன்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

செஞ்சியில் மிகப் பிரபலமான சுற்றுலா தளமான செஞ்சி கோட்டை அமைந்துள்ளது .செஞ்சி கோட்டையைப் பார்வையிடுவதற்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து  ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பேருந்து நிலையம் என்பதால் பொதுமக்கள் பெருமளவில் கூடுவதோடு, அவர்கள் மற்ற ஊர்களுக்கோ அல்லது வேறு இடத்திற்கோ செல்வதற்கு இங்கு சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது.

இவ்வாறு காத்திருக்கும் பொதுமக்கள் தங்களின் அவசர நேரத்தில்  பொது கழிவறை இல்லாததால், கட்டண கழிவறையைப் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட பேருந்து வசதிக்கு மட்டுமே பணம் எடுத்து வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதனால் மிகவும் அவதிப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் கூறுகிறார்கள். மேலும் செஞ்சி பேருந்து நிலையத்திற்கு வரும் சிலர் கட்டண கழிவறைக்குப் பணம் இல்லாமல் அப்பகுதிக்கு அருகில் இருக்கும் மறைவான இடத்தில் சிறுநீர் கழித்துவிட்டுச் சென்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசி காணப்படுகிறது. கூடுதலாக விசாரித்த பிறகே தெரிந்தது, தற்போது கட்டண கழிப்பறை எனப் பலகை வைத்து பணம் வசூலிப்பது பொது கழிப்பறை என. மேலும் கடந்த சில மாதங்களாகவே இவ்வாறு தான் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது.

இது குறித்து விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் கேட்டபோது, "நான் பணியில் வந்து சேர்ந்தே ஒரு வாரம் தான் ஆகிறது. நான் என்ன குற்றச்சாட்டு என விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறேன்" எனக் கூறினார். 

மாவட்ட ஆட்சியர் பேசி முடித்த ஐந்து நிமிடங்களிலேயே, செஞ்சி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து நம்மைத் தொடர்புகொண்டு பேசிய அலுவலர் ஒருவர், "செஞ்சி பேருந்து நிலையத்தில் இரண்டு கழிவறைகள் உள்ளது. ஒன்றில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் பூட்டி இருக்கிறது. மற்றொன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்டண கழிவறையில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அங்குள்ள பொருள்களும், கட்டண கழிவறை என்ற பலகையும் பொது கழிவறையில் இருக்கும் இடத்தில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அதனைக் கட்டண கழிவறை எனத் தவறாக எண்ணுகிறார்கள். ஆனால் அது பொதுக் கழிப்பிடமே. அங்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. அவ்வாறு கட்டணம் வசூலித்தாலும் அது தவறு. கட்டண கழிப்பறையில் கட்டுமான பணி முடிந்த பிறகு பொருள்கள் அனைத்தும் மாற்றி வைக்கப்படும்" எனக் கூறினார். 

இவர் பேசிய அன்றே மீண்டும் செஞ்சி பேருந்து நிலையத்திற்குச் சென்றோம். கட்டண கழிவறை என்ற பலகை வைத்து வெளியே மேசை போட்டு, கட்டணம் தற்போது வரை வசூலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவற்றைப் பார்த்தால் குறுகிய காலத்தில் கட்டுமான பணிக்காகப் பொருள்களை மாற்றி வைத்ததாகத் தெரியவில்லை. வெகு நாள்களாகவே கட்டண கழிப்பறை என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிப்பதாகத் தெரிகிறது. மேலும் பொதுமக்கள் இவற்றைப் பற்றி பணம் வசூலிப்பவரிடம் கேட்டபோது, "கான்ட்ராக்ட்டில் இந்த கழிவறையினை நடத்துகிறோம். எனவே பணம் வசூலிக்கத்தான் செய்வோம். வேண்டுமென்றால் கழிவறையை உபயோகப்படுத்துங்கள். இல்லையெனில் சென்றுவிடுங்கள்" என அலட்சியமாகப் பதில் கூறுகிறார். 

எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தானின் வீடு செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளித்தான் உள்ளது. ஆனாலும் இந்த அவல நிலை, அஞ்சுகம் அம்மாள் நினைவு பேருந்து நிலையத்திற்கு ஏற்பட்டுள்ளது.  

`அரசு பள்ளியில் கழிவறை வசதி இல்லை!' - அவசரத்துக்கு அல்லாடும் மாணவர்கள்... திருவாரூர் அவலம்!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், சவளக்காரன் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி. 1954 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 29 மாணவர்களும் 33 மாணவிகளும் படித்து வருகின்றனர். இதில் பெரும... மேலும் பார்க்க

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க