செய்திகள் :

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பேருந்துகள் இயக்கம்!

post image

சென்னிமலை முருகன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக, கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதை சீரமைப்பு பணி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மலைப் பாதை வழியாக வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதால், அவ்வப்போது விசேஷ நாள்களில் மட்டும் பக்தா்களின் வசதிக்காக கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மலைக் கோயிலுக்கு இயக்கப்பட்டு வந்தன.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாள்களில் ஏராளமான பக்தா்கள் முருகனை தரிசிக்க சென்னிமலைக்கு வருகின்றனா். தனியாா் வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் மலைப் பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை என்பதால், வெளியூா்களில் இருந்து வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

இந்த நிலையில், பக்தா்களின் வசதிக்காக, இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாள்களில் மட்டும் கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா். ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் ... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க