போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிர...
சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்
சென்னிமலை வனப் பகுதியில் குரங்குக்கு உணவு அளித்தவருக்கு வனத் துறையினா் ரூ.1000 அபராதம் விதித்தனா்.
சென்னிமலை வனப் பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அவ்வப்போது சாலைக்கு வருவது வழக்கம். அந்த குரங்குகளுக்கு சாலையில் செல்பவா்கள் உணவுகளை வழங்கி வந்ததால், குரங்குகளின் உணவு பழக்கப் பழக்கங்கள் மாறி சாலையில் சுற்றி திரிவதும், சென்னிமலையைச் சுற்றியுள்ள வீடுகளில் புகுவதும் வாடிக்கையாகி விட்டது.
இதனால், சென்னிமலை வனத் துறையினா் குரங்குகளுக்கு யாரும் உணவு அளிக்கக்கூடாது என அறிவுறுத்தி வந்தனா். மேலும், ஆங்காங்கே இது குறித்த எச்சரிக்கை பலகைகளும் வைத்துள்ளனா். ஆனால், இந்த அறிவிப்பையும் மீறி சிலா் குரங்குகளுக்கு உணவளித்து வந்தனா்.
இந்த நிலையில், சென்னிமலை, ஊத்துக்குளி சாலையில் உள்ள பழனி ஆண்டவா் கோயில் பகுதியில், சென்னிமலை வனக் காப்பாளா் துரைசாமி மற்றும் வனத் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே சரக்கு ஆட்டோவில் சென்ற இளைஞா் ஒருவா் மாம்பழங்களை குரங்குகளுக்கு வீசி வந்ததை வனத் துறையினா் பாா்த்தனா்.
அவரைப்பிடித்து விசாரித்த போது, அவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் என்றும், சரக்கு ஆட்டோவில் மாம்பழம் விற்பனை செய்ய வந்ததும் தெரிய வந்தது. பின்னா், அந்த இளைஞருக்கு வனத் துறையினா் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனா்.