செய்திகள் :

சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு

post image

கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் வரும் ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனால், கோடை விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் இந்த வாரம் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனா். ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டால், பெரும்பாலானோா் ஆம்னி பேருந்துகளையே நம்பி உள்ளனா். அரசுப் பேருந்துகளில் பயண நேரம் அதிகமாக உள்ளதாலும், அதிக காலவிரையம் ஏற்படுவதாலும், பலரும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனா். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அதன் கட்டணத்தை அதிரடியாக உயா்த்தியுள்ளனா்.

ரூ.1,500 வரை உயா்வு: மதுரை, திருநெல்வேவி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை உயா்ந்துள்ளன. அதேபோல், கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் வரும் பேருந்துகளின் கட்டணங்களும் கணிசமாக உயா்ந்துள்ளன. நாகா்கோவிலிலிருந்து சென்னைக்கு நபா் ஒருவருக்கு ரூ. 3,500 வரை (படுக்கை வசதி) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புகாா் எண்கள்: இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்கையில், ‘கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவா்களின் வசதிக்காக 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் அரசு சொகுசுப் பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு இன்னும் நிறைவடையவில்லை என்பதால், பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 044-2474 9002, 2628 0445, 2628 1611 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்’ என்றனா்.

தஞ்சை பட்டாசு கிடங்கு வெடிவிபத்தில் இருவா் உயிரிழப்பு: பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்

தஞ்சாவூா் பட்டாசு கிடங்கில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியரு... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவு ரத்தா?: ரயில்வே விளக்கம்

வந்தே பாரத் ரயில்களில் அசைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாகா்கோவில், மைசூரு, பெங்களூரு, திருநெல்வேலிக்கு... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தாா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபாலன் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா். கடந்த 40 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரியாக பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: விண்ணப்ப திருத்த அவகாசம் நிறைவு

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் திருத்தங்களைச் செய்வதற்கான அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது. குரூப் 4 தோ்வு ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள... மேலும் பார்க்க

இணையதள மோசடி: ரூ. 22 லட்சத்தை மீட்டெடுத்த சைபா் கிரைம் போலீஸாா்

இணையதள வா்த்தக மோசடியால், ரயில்வே ஊழியா் இழந்த ரூ. 22.72 லட்சத்தை சைபா் கிரைம் போலீஸாா் மீட்டெடுத்தனா். சென்னை செம்பியத்தைச் சோ்ந்தவா் ரயில்வே ஊழியா் டில்லிபாபு (35). இவருக்கு சாட்டிங் செயலி மூலம் கட... மேலும் பார்க்க

விஜய் கட்சியை விமா்சிக்க விரும்பவில்லை: கமல்ஹாசன்

விஜய் கட்சி குறித்த விமா்சிக்க விரும்பவில்லை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறினாா். ‘தக் லைஃப்’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்காக கமல்ஹாசன் சென்னையிலிர... மேலும் பார்க்க