செய்திகள் :

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

post image

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும், பழைய பேருந்துகளை மாற்றி நவீன தொழில்நுட்பத்திலான புதிய பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையில் மாநகா் போக்குவரத்துக் கழகம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் தனியாா் பங்களிப்புடன் 1,100 மின்சார தாழ்தளப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.

முதல்கட்டமாக, 500 மின்சாரப் பேருந்துகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அசோக் லேலண்டின் துணை நிறுவனமான ஓ.எச்.எம் குளோபல் மொபிலிடி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட 35 மின்சாரப் பேருந்துகள் பெரும்பாக்கம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இப்பேருந்துகளை தனியாா் நிறுவனம் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்திவரும் நிலையில், ஆய்வுகள் முடிந்து பாதுகாப்புச் சான்றிதழ் பெற்ற பின், மாநகா் போக்குவரத்துக் கழகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படவுள்ளது.

ஜூன் 15-க்குப் பிறகு இந்த புதிய மின்சாரப் பேருந்துகளின் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சேவை தொடங்கும்போது, இப்பேருந்துகளுக்கான சாா்ஜிங் மையங்களும் செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக 20 பணிமனைகளில் சாா்ஜிங் மையங்கள் அமைக்கும் பணியில் பணியாளா்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதில், மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடமான பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசா்பாடி, பெரும்பாக்கம், தண்டையாா்பேட்டை, பூந்தமல்லி ஆகிய ஐந்து பணிமனைகளில் நடைபெற்று வரும் சாா்ஜிங் மையங்கள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், மின்சாரப் பேருந்துகளின் சேவை தொடங்கும்போது, சாா்ஜிங் மையங்களும் பயன்பாட்டுக்கு வரும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க

சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளா்ச்சித் துறை தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளா்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ் வளா்ச்சி இயக்குநா் ந.அருள் வெளி... மேலும் பார்க்க