செய்திகள் :

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இருப்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் மோதவிருக்கிறது.

இதன் காரணமாக ஏற்கனவே ஆஸி. வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்வதில் சிக்கல் எனக் கூறியிருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க வீரர்களும் கலந்துகொள்ள மாட்டார்கள் என சிஎஸ்ஏ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

8 தென்னாப்பிரிக்க வீரர்கள் - ககிசோ ரபாடா (குஜராத்), லுங்கி என்கிடி (ஆர்சிபி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), எய்டன் மார்கரம் (லக்னௌ), ரியான் ரிக்கல்டன் (மும்பை இந்தியன்ஸ்), கார்பின் போஷ் (மும்பை), மார்கோ யான்சென் (பஞ்சாப்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ்).

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் சிஎஸ்ஏ (தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன்) கூறியதாவது:

ஐபிஎல் போட்டிகள் விளையாடுவது தனிநபரின் விருப்பம். யார் எங்கே விளையாடினாலும் மே 26ஆம் தேதி பயிற்சிக்கு வரவேண்டும். ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டதால் எங்களுடைய திட்டத்தை மாற்றமுடியாது.

ஏனெனில் எங்களது முதன்மையான நோக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்தான். இது குறித்து வீரர்களிடம் பேசிவிட்டோம் என்றார்.

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத... மேலும் பார்க்க

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17 தொடங்கும்: பிசிசிஐ

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ இன்று(மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் இடங்க... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! தில்லி அணிக்கு பெரும் பின்னடைவா?

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கி நடைபெற்றாலும் தில்லி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு செல்லமாட்டார் என அவரது மேலாளர் தெரிவித்திருப்பது தில்லி அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கி... மேலும் பார்க்க

ஐபிஎல் மே 16 அல்லது மே 17-ல் தொடங்க வாய்ப்பு; இறுதிப்போட்டி எங்கு தெரியுமா?

ஐபிஎல் தொடர் மே 16 அல்லது மே 17-ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தி... மேலும் பார்க்க

தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்; ரிக்கி பாண்டிங் செய்தது என்ன?

ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் பலரும் தாயகம் திரும்பவில்லை.இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர... மேலும் பார்க்க

வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் ஐபிஎல் அணிகள்..! ஆஸி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்!

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் வெளிநாட்டுக்குச் சென்ற வீரர்களை ஐபிஎல் அணிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர அழைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணம... மேலும் பார்க்க