செய்திகள் :

சென்னையில் காவல் ரோந்து வாகனத்தில் இருந்த பை திருட்டு!

post image

சென்னையில் காவல்துறை ரோந்து வாகனத்தில் இருந்த பை திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கே.கே. நகர் பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகனத்தில் காவலர் ஒருவர் வைத்திருந்த பையை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

அந்த பையில் காவலரின் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பேருந்து பயண அட்டை மற்றும் ரூ. 4,000 பணம் வைத்திருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினரின் ரோந்து வாகனத்தில் இருந்த காவலரின் பையே திருடுபோன சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடக முன்னாள் டிஜிபியைக் கொன்றதாக மனைவி வாக்குமூலம்! என்ன நடந்தது?

தமிழக ஒப்பதலின்றி மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது! - துரைமுருகன்

தமிழகத்தின் ஒப்புதலின்றி கா்நாடகம் மேக்கேதாட்டு அணையைக் கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மேக்கேதாட்டு அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க... மேலும் பார்க்க

‘ஏசி’ மின்சார ரயில் சேவை: பயணிகள் கருத்து தெரிவிக்கலாம்! - தெற்கு ரயில்வே

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஏசி புறநகா் மின்சார ரயிலின் நிறை, குறைகளை பயணிகள் தெரிவிக்கலாம். இதுகுறித்து தெற்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

இன்று முதல் பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவு: மாநகா் போக்குவரத்துக் கழகம்!

மாநகா் போக்குவரத்து ஊழியா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை (ஏப். 21) முதல் பயோமெட்ரிக் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகா் போக்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பாஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் மகன் கோபி(45). இவா் சந்திரன் குப்புசாமி என்பவரின் ட... மேலும் பார்க்க

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்!

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவானது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்... மேலும் பார்க்க

மே 2-இல் சங்கர மடத்தில் ஆதிசங்கரா் ஜெயந்தி மகோற்சவம்

ஆதிசங்கரரின் ஜெயந்தி மகோற்சவம் வரும் மே 2 -ஆம் தேதி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெறவுள்ளது என மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறியது: கேரள மாநிலம் காலடியில் 2,533 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க