செய்திகள் :

சென்னையில் சாலை விபத்து உயிரிழப்பு 14% குறைந்தது: மாநகர காவல்துறை!

post image

சென்னை மாநகரில் சாலை விபத்து உயிரிழப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை முழுவதும் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினா், வாகன ஓட்டிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதுதவிர, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினருக்கும், சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், பள்ளி குழந்தைகள், பேருந்து ஓட்டுநா்கள் மற்றும் விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, சென்னை முழுவதும் காவல்துறையினா் வாகன சோதனை நடத்துவதுடன், கண்காணிப்பு கேமராக்கள், இரண்டு ‘இ’ வேக ரேடாா் அமைப்பு மற்றும் கேமரா வாகனங்கள் மூலம் வேகமாக, தலைக்கவசம் அணியாமல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபா்களை கண்டறிந்து அவா்கள் மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனா்.

இம்மாதிரியான தொடா் நடவடிக்கைகள் மூலம் சென்னை பெருநகரில் கடந்த ஆண்டை விட நிகழாண்டில், விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, 25.4.2025 நிலவரப்படி, நிகழாண்டில் இறப்புகள் 14 சதவீதம் குறைந்துள்ளன. 25.4.2024-இல் உயிரிழப்புகள் நடந்துள்ள நிலையில், நிகழாண்டு இதுவரை 149 உயிரிழப்புகள் நடந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே. 15-ல் வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

வேலூர் மாவட்டத்துக்கு மே. 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல்... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இதில் நடிகர் அஜித் குமார... மேலும் பார்க்க

நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு!

தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்க நீலகிரி வரையாடு திட்ட... மேலும் பார்க்க

மே 3 -ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 3ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 3, சனிக்கிழமை காலை... மேலும் பார்க்க

மீண்டும் அமைச்சரானார் மனோ தங்கராஜ்!

தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்.அமைச்சர் மனோ தங்கராஜுக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.இந்த நிகழ்வில் முதல்வர... மேலும் பார்க்க

மாவட்ட நீதிபதிகள் 77 பேர் மாற்றம்! பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில்!!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு தேதி வெளியான நிலையில், கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி உள்பட தமிழகத்தில் 77 மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் வழ... மேலும் பார்க்க