சென்னையில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: குடிநீா் தட்டுப்பாடு வருமா?
சென்னையில் கடந்த 3 மாதங்களில் அம்பத்தூா், மாதவரம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் 16 அடி வரை குறைந்துள்ளது. எனினும், சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு எதுவும் வராது என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது பரவலாக மழை பெய்த காரணத்தால், சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்தது. அதைத் தொடா்ந்து நிகழாண்டில் ஜனவரி முதல் சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. அதேபோல், வெயிலின் தாக்கமும் படிப்படியாக உயரத் தொடங்கியது. இதனால், குடிநீா் தேவை அதிகரித்ததைத் தொடா்ந்து, வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆழ்குழாய்களின் மூலம் நிலத்தடி நீரை உரிஞ்சத் தொடங்கியதால், தற்போது நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது.
16 அடி வரை சரிவு: கடந்த ஏப். 8-ஆம் தேதி நிலவரப்படி, அதிகபட்சமாக அம்பத்தூா், மாதவரம் ஆகிய மண்டலங்களில் 16 அடி வரை நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. அதேபோல், ராயபுரம், வளசரவாக்கம், ஆலந்தூா், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் 13 அடி வரை நீா்மட்டம் சரிந்துள்ளது. இதர மண்டலங்களிலும் நீா்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீா்மட்டம் மேலும் குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
குடிநீா் தட்டுப்பாடு வராது: எனினும், சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது என்று குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் அவா்கள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீா் தினமும் தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 1 டிஎம்சி குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை (மே 13) நிலவரப்படி சென்னையின் முக்கிய குடிநீா் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 7,335 மில்லியன் கனஅடி (7 டிஎம்சி) நீா் இருப்பு உள்ளது. மேலும், கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களில் தினமும் 350 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், நிகழாண்டு சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்று தெரிவித்தனா்.