செய்திகள் :

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

post image

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

இது தொடர்பாக பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் அவர் பேசியதாவது:

பிகாரில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது; எனினும் இந்த விவகாரத்தில் இன்னும் நிறைய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பிகாரில் மேலும் பல சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக நாட்டில் உள்ள மற்ற மருத்துவமனைகளுடன் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிறப்பான சிகிச்சைகளை அளிப்பதற்காக சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்கள் பிரத்யேக மருத்துவ மையங்களை உருவாக்கியுள்ளன. அதுபோன்ற மையங்களை பிகாரும் உருவாக்க வேண்டும்.

இதன்மூலம் பிகார் மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதுடன் இந்த மாநிலத்தின் பொருளாதாரமும் மேம்படும். இந்தப் பெருமுயற்சிக்கு பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் அதன் முன்னாள் மாணவர்களும் பெரிய அளவில் பங்களிக்க முடியும்.

ஆசியாவின் சிறந்த மருத்துவமனைகளில் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் ஒன்றாகும்.

இந்தக் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் தங்கள் சேவையின் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இதற்கு புகழைத் தேடித் தந்துள்ளனர். சிகிச்சைக்காக வேறொரு நகரத்துக்கோ வேறொரு மாநிலத்துக்கோ செல்வதில் சிகிச்சையில் தாமதம், உணவுப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாடு முழுவதும் மருத்துவக் கல்வி நிலையங்களை பரவலாக அமைப்பது அவசியம்.

இந்த சகாப்தத்தில் மருத்துவத் துறையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றுகிறது. செயற்கை நுண்ணறிவும் ரோபோக்களும் மருத்துவ நடைமுறைகளை எளிதாக்குகின்றன.

பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடர்புடைய அனைவரும் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றத் தயாராக இருக்க வேண்டும்.

மருத்துவர்கள் ஆய்வாளர்களாகவும் நோயைக் குணப்படுத்துபவர்களாகவும் ஆசிரியர்களாகவும் செயல்பட்டு மக்களுக்கும் சமூகத்துக்கும் சேவை புரிகின்றனர் என்றார் அவர்.

கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் வழிபாடு!

மகாசிவராத்திரியை முன்னிட்டு கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு மேற்கொண்டார். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகா சிவராத்திரிய... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்று திரும்பிய ஜேஎம்எம் எம்பியின் கார் விபத்தில் சிக்கியது!

மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜியின் கார் விபத்தில் சிக்கியதால் அவர் காயமடைந்தார். மாநிலங்களவை உறுப்பினரான மஹுவா மாஜி சென்ற கார் ஜார்க்கண்டின் லதேஹர் மாவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் கேஜரிவால் போட்டியில்லை! வேட்பாளர் அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வென்று ப... மேலும் பார்க்க

மகா சிவராத்திரி: மோடி, ராகுல் வாழ்த்து!

மகா சிவராத்திரி தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. நாட்டின் பல... மேலும் பார்க்க

தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!

தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டா... மேலும் பார்க்க

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க