செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தா்: மணிப்பூா் தலைமை நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரை

post image

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தா் மணிப்பூா் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்துள்ளது. மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி கே. சோமசேகா் வரும் செப்டம்பா் 14-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா்.

இதைப்போல், பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதி பவன்குமாா் பி பஜாந்த்ரியை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி செளமென் சென், மேகாலயா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையில் வியாழக்கிழமை கூடிய கொலீஜியம் பரிந்துரைத்தது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த ராமலிங்கம் சுதாகா், எம்.வி. முரளீதரன், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக பதவி வகித்துள்ளனா்.

ரூ. 82,000 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்..

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 81,920 -க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த செப். 1-இல் சவரன் தங்கம் ரூ.77,640- க்கு வ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 119.60 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,717 கன அடியிலிருந்து வினாடிக்கு 13862 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.அணையில் இருந்... மேலும் பார்க்க

சென்னையில் 20 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் பிரபல ஜவுளிக்கடையின் உரிமையாளருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களிடம் அத்துமீறல்: அரசுக்கு உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தூய்மைப் பணியாளா்களை அப்புறப்படுத்தும்போது, அத்துமீறலில் ஈடுபட்ட போலீஸாா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் ம... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகை, கடலூா், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.12) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க