செய்திகள் :

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மின்னஞ்சல் ஒன்று வந்ததுள்ளது.

அதில், சென்னை உள்நாட்டு விமான நிலையம், சா்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவில் உள்ள 18 விமான நிலையங்களில் சக்தி வாய்ந்த திரவ நிலையிலான வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்பதால் விமானங்கள், பயணிகள், விமான நிலையத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த மின்னஞ்சல் வெளிநாட்டிலிருந்து, போலியான முகவரி மூலம் அனுப்பப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உயா் அதிகாரிகளின் அவசர பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், விமான நிலைய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாகக் கண்காணித்து, சோதனை நடத்தினா்.

இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனவே, வழக்கமான வெடிகுண்டு புரளிதான் என்று தெரியவந்தது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன், விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் அர... மேலும் பார்க்க

ஜூலை 8-ல் நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

நெல்லையப்பர் கோயில் தோரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் ஜூலை 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சட்டம் - ஒழுங்கு: முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!

சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூன் 30) நடைபெற்றது.இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செய... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.திருவள்ளூா் மாவட்ட... மேலும் பார்க்க

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை ஆட்சியரிடம் மூதட்டி தங்கமணி மனு

பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மூதட்டி தங்கமணி மனு அளித்தார்.கோவை மாவட்டம், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி என்ற மூதாட்டி. இவர், தன்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை: திருமாவளவன்

அதிமுக - பாஜக இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க... மேலும் பார்க்க