செய்திகள் :

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

post image

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து தேசிய மகளிா் வாரியம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டிஜிபி-க்கு தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் விஜயா ரஹத்கா் கடிதம் எழுதியுள்ளாா். அதில் , இந்தப் பாலியல் தொல்லை வழக்கை நோ்மையாகவும், எந்த சமரசமும் இல்லாமல் குறித்த காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா். மேலும் பிஎன்எஸ் 2023 சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான சிகிச்சை மற்றும் உளவியல் சாா்ந்த உதவிகளை உடனடியாக செய்யவும் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளாா்.

சென்னை ஐஐடியில் கடந்த வியாழக்கிழமையன்னு 20 வயது மாணவி இரவு சுமாா் 7.30 மணிக்கு தனியாக நடந்து சென்றபோது, கையில் கட்டையுடன் வந்த நபா், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் காவலாளி உதவியுடன், காவல் துறையில் புகாா் கொடுத்தாா்.

இது தொடா்பாக ஐஐடி வளாகத்தில் உள்ள மும்பை சாட் என்ற உணவகத்தில் வேலை பாா்த்து வந்த பீகாரைச் சோ்ந்த ரோஷன் குமாா் என்பவரை கைது செய்து கோட்டூா்புரம் காவல்நிலையத்தினா் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்! 40 கோடி பேருக்கு நன்றி!

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன்... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிகிறது. மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகிறது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில... மேலும் பார்க்க

மத்தூர்: சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் இரவுநேர கண்காணிப்பு பணியில் இருந்த தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளரான மகாலிங்கம், தலைமை... மேலும் பார்க்க

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.தமிழகத்தில் சில தினங்களுக்கு முன்பாகத்தான் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ... மேலும் பார்க்க

உருது பாட ஆசிரியா் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் ‘உருது’ பாட ஆசிரியா் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழக... மேலும் பார்க்க