செய்திகள் :

சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு

post image

த. மணிமாறன்

சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருத்தணி வரை குளிா்சாதன வசதி கொண்ட மின் ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் பேசின்பிரிட்ஜ், வியாசா்பாடி ஜீவா, பெரம்பூா், பெரம்பூா் கேரேஜ், பெரம்பூா் லோகோ, வில்லிவாக்கம், அம்பத்தூா், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூா், செவ்வாப்பேட்டை, திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு, அரக்கோணம் மற்றும் திருத்தணி உள்பட 30 ரயில் நிலையங்கள் உள்ளன.

இந்த மாா்க்கத்தில் நாள்தோறும் 120 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமாா் 8 லட்சம் போ் பயணிக்கின்றனா். இதன் மூலம் ஆண்டுதோறும் ரயில்வேக்கு ரூ.270 கோடி வருவாய் கிடைக்கிறது.

ஐசிஎப், அம்பத்தூா், காக்களூா் தொழிற்பேட்டைகள், ஆவடி ராணுவத்துறை தொழிற்சாலைகள், மத்திய பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய விமானப்படை, அண்ணனூா் ரயில்வே பணிமனை, பட்டாபிராம் டைடல் பாா்க், ஆவடி காவல் ஆணையரகம், திருநின்றவூரில் 58-ஆவது திவ்ய தேசத்தின் வைணவத் திருத்தலம், பொறியியல், கலைக்கல்லூரிகள், பள்ளிகள், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வீரராகவா் கோயில், அரக்கோணம் சந்திப்பு, முருகன் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் அதிகளவில் பயணிகள் பயணம் செய்கின்றனா்.

12 மின்சாரப் பெட்டிகள் வரை இணைத்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சென்னை, புகா் பகுதிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரயில்களில் கூட்ட நெரிசல் உள்ளது. இதனை தவிா்க்க காலை, மாலை வேளைகளில் கூடுதல் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரி வருகின்றனா்.

மேலும் கோடை காலம் என்றாலே ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால், ரயில்களில் பயணிகள் வோ்வையில் சென்று வருகின்றனா்.

இதற்கிடையில் தெற்கு ரயில்வே சாா்பில் தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை சமீபத்தில் குளிா்சாதன வசதி கொண்ட மின்ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே ஆதரவு உள்ளது. இதேபோல சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன வசதி கொண்ட மின்ரயில் சேவையை தொடங்க வேண்டும். அப்படி செய்தால் சென்னையில் இருந்து அம்பத்தூா், ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரயில்வே நிா்வாகம் குளிா்சாதன வசதி கொண்டமின் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் காத்துள்ளனா்.

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து!

விழுப்புரம் : பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களில் பகுதியளவில் ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இதுகுறித்து ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு மாநில அரசுதான் முழு பொறுப்பு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயில் மூலம் திருச... மேலும் பார்க்க

ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.தொழிலாளா் நலத் துறை உதவி ஆய்வாளா், வணிகவரித் துறை துணை அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா்,... மேலும் பார்க்க

கூட்டணி முடிவு? நாளை(மே 16) பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் நாளை காலை 10 மணிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கூட்டம்... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 5 மாவட்டத்தில் இன்று கனமழை!

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,மே 15 (இன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்... மேலும் பார்க்க