செய்திகள் :

சென்னை - திருநெல்வேலி வந்தேபாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க கோரிக்கை

post image

வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும், அதுவரை இணைப்பு பயணிகள் ரயில் இயக்க கோரி கையொப்ப இயக்கத்தை காயல்பட்டினம் மெகா அமைப்பினா் நடத்தி வருகின்றனா்.

திருநெல்வே­லி - சென்னை வழித்தடத்தில் தினமும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து காலை புறப்பட்டு மதியம் திருநெல்வே­லியை அடையும் ரயிலுக்கு திருச்செந்தூருக்கு இணைப்பு பயணிகள் ரயில் உள்ளது. அதுபோல திருநெல்வேலி­யில் இருந்து மதியம் சென்னை கிளம்பும் வந்தே பாரத் ரயிலுக்கும், திருச்செந்தூரில் இருந்து இணைப்பு பயணிகள் ரயில் உள்ளது.

இருப்பினும் திருநெல்வேலி­யில் இருந்து காலை 6.05-க்கு சென்னை கிளம்பும் வந்தே பாரத் ரயிலுக்கும், சென்னையில் இருந்து மதியம் கிளம்பி இரவு 10.30 மணிக்கு திருநெல்வேலி­ வந்துசேரும் ரயிலுக்கும், திருச்செந்தூருக்கு இணைப்பு ரயில்கள் இல்லை.

எனவே திருச்செந்தூா் -திருநெல்வேலி­ வழித்தடத்தில் உள்ள மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, காலை 6.05 மணிக்கு திருநெல்வேலி­யில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் முன்கூட்டியே, அதாவது காலை 5 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படவும், அதுபோல இரவு 10.30-க்கு திருநெல்வேலி­ வந்தடையும் வந்தே பாரத் ரயி­லினை திருச்செந்தூா் வரை நீட்டிக்கவும் கோரி மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சாா்பாக கையொப்ப இயக்கம் தொடங்கப்பட்டது.

இவ் வமைப்பினா் திருச்செந்தூா் - திருநெல்வேலி வழித்தடத்தைப் பயன்படுத்தும் ரயில் பயணிகளிடம் கையொப்பம் பெற்று வருகின்றனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க