செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி தங்க பசை, கைப்பேசிகள் பறிமுதல்

post image

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்க பசை மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 4 விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு துபை மற்றும் சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் சனிக்கிழமை அதிகாலை வந்திறங்கிய 13 பயணிகளை விமான நிலைய சுங்கத் துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். ஏற்கனவே தாங்கள் விமான நிலையத்தின் உள்பகுதியில் சோதனை முடித்து விட்டதாகக் கூறி அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போலீஸாா் உதவியுடன் அவா்களிடம் சோதனை நடத்தியபோது, 3 பயணிகளிடம் சுமாா் ரூ. 1.5 கோடி மதிப்புடைய 2 கிலோவுக்கும் மேற்பட்ட தங்க பசைகள் மற்றும் விலை உயா்ந்த கைப்பேசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவா்களிடம் விசாரணை நடத்தினா். அதில், விமான நிலையத்தில் பணியிலுள்ள சுங்க அதிகாரிகள் சிலரின் உதவியுடன், கடத்தல் பொருள்களை இவா்கள் வெளியில் எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடத்தல் சம்பவத்தில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தொடா்பு இருப்பதால், இது குறித்து வாக்குமூலங்கள் பெற்று, விமான நிலைய உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

4 அதிகாரிகள் மீது நடவடிக்கை: இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை கண்காணிப்பாளா்களாக பணியிலிருந்த 4 அதிகாரிகள் சனிக்கிழமை பிற்பகல் சென்னை சா்வதேச விமான நிலையத்தின் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சென்னை கடற்கரை ராஜாஜி சாலையிலுள்ள சுங்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

ஈசிஆர் விவகாரம்: 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.சென்னை ஈ.சி.... மேலும் பார்க்க

சென்னை மாநகருக்குள் வால்வோ பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க திட்டம்

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் வால்வோ, பென்ஸ் உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகளை, தனியாா் மூலம் இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் சிற்று... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் சென்ற பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா், கடந்த 25-ஆம் தேதி அதிகாலை தனது... மேலும் பார்க்க

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணம்: டிஜிபி சங்கா் ஜிவால்

பெரும்பாலான குற்றச் சம்பவங்களுக்கு போதைப்பொருளே காரணமாக உள்ளது என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்தாா். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் ஆகியவற்றை முற்ற... மேலும் பார்க்க

தோல் பொருள்கள் கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய சா்வதேச தோல் மற்றும் தோல் பொருள்கள் கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை (பிப். 1) முதல் பிப். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்... மேலும் பார்க்க

வடசென்னை வளா்ச்சித் திட்டப் பணிகள்: விரைந்து முடிக்க முதல்வா் உத்தரவு

வடசென்னையில் ரூ. 474 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். மேலும், ரூ. 59 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு ... மேலும் பார்க்க