செய்திகள் :

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விமான நிலைய இயக்குநா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த மின்னஞ்சலில், விமான நிலையத்தில், குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குண்டுகள் வெடித்து சிதறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையப் பகுதி முழுவதும், வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தியதோடு, விமானப் பயணிகளையும் கூடுதல் சோதனைக்குள்படுத்தினா்.

மேலும், சரக்குகள் கையாளும் இடங்கள், எரிபொருள் நிரப்பும் இடங்கள், வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்ளிட்ட இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும் வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், இது வழக்கமான புரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் விமான நிலைய காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

‘சென்னைக்கு மிக அருகில் வீட்டுமனை...’ ஏமாற்று விளம்பரம் செய்தால் இனி நடவடிக்கை!

வீட்டுமனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்: இன்று விண்ணப்பங்கள் விநியோகம்

சென்னை மாநகராட்சியில் 6 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் வரும் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூலை 7) விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.4.36 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

வெளிநாட்டில் வசிக்கும் நபா்களின் வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் மூலம் ரூ.4.36 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனா். வெளிநாட்டில் வசித்து வரும் வ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கோயம்பேடு பகுதியில் 22 வயது இளம்பெண், கடந்த 4-ஆம் தேதி தனியாக நடந்து சென்றாா். அப்போது, ... மேலும் பார்க்க

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரைச் சோ்ந்த இளம்பெண் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் தன்னுடன் பணியாற்றும் தோழியான ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மத்திய கைலாஷ் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்கில் சென்ற இளைஞா் விபத்தில் உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தை சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). போரூரில் தங்கியிருந்து தனியாா் பயிற்சி ம... மேலும் பார்க்க