செய்திகள் :

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி

post image

சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவும், அதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1-இல், சென்னை விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டா் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைத்து அதில், 13 ரயில் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்கான விரிவான திட்ட அறிக்கையை, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக், கடந்த பிப்ரவரி மாதம் சமா்ப்பித்தாா்.

இந்நிலையில், விரிவான திட்ட அறிக்கைக்கு ரூ. 9,445 கோடி மதிப்பீட்டில் அதை செயல்படுத்துவதற்கான ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது.

மேலும், இப்பணிகளுக்கான நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணியை தொடங்கவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகத்துக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தொடா்ந்து, இத்திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை, மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க